மீன் வள மேலாண்மை அவசியம்!
Dinamani Thoothukudi
|July 11, 2025
கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல்கள் வரை தீரக நீர்ப்பரப்பு (கரையை ஒட்டிய கடல் நீர் பரப்பு) என்றும், அதற்கு அப்பால் 12 முதல் 200 நாட்டிக்கல் மைல்கள் வரையிலான பகுதி பிரத்யேக பொருளாதார மண்டலம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் பரப்பளவு சுமார் 20.2 லட்சம் சதுர கி.மீ. ஆகும். நமது நாடு ஆண்டுக்கு சுமார் 25 முதல் 28 லட்சம் மெட்ரிக் டண் மீன்களை உற்பத்தி செய்கிறது. இதில் 60 சதவீத மீன்கள் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதையும், அவற்றை வேட்டையாடுவதையும் தடுக்கும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், மீன்பிடித்தலை வரைமுறைப்படுத்தும் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம், கடற்கரைப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், தொழில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிக்கை, கடல் மாசுபாட்டைத் தடுக்கக் கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், மீன்பிடி கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கக்கூடிய இந்திய மீன்பிடி சட்டம், கடல் உயிரின மரபணு வளங்களைப் பாதுகாக்க உயிரியல் பல்வகைமைச் சட்டம் மற்றும் கடல் நீர் பரப்பு பற்றிய சூழலியல் விதிகளைக் கொண்டுள்ள ஐ.நா. சபையின் கடல் சட்ட சாசனம் போன்றவை இந்தியாவில் நடைமுறையில் உள்ளன.
அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியல் பிரிவு 21இன் படி தீரக நீர்ப்பரப்பு எல்லைக்குள் மீன்பிடி தொழில் கண்காணிக்கப்படுகிறது.
1979-ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மாதிரி மசோதாவின் அடிப்படையில் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தீரக நீர்ப்பரப்பு கடல் எல்லைக்குள் உள்ள மீன்வளத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை இயற்றியுள்ளன.
Diese Geschichte stammt aus der July 11, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
1 mins
December 20, 2025
Dinamani Thoothukudi
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது
தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Translate
Change font size

