The Perfect Holiday Gift Gift Now

துறந்தார் பெருமை போற்றுதும்!

Dinamani Thoothukudi

|

July 09, 2025

சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாது இருப்பதோடு எல்லாவுயிரும் இன்புற்றிருப்பதற்காக தன் வாழ்வைத் தகுதிப்படுத்திக் கொள்வதே மெய்த்துறவின் அடிப்படை. எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவர் யாரோ அவரே மெய்த்துறவி.

- அருணன் கபிலன்

தமிழ்மரபு காட்டுகிற அறங்கள் இரண்டனுள் ஒன்று இல்லறம்; மற்றொன்று துறவறம். இல்லறம் துறவறத்துக்கான நல்வழி. துறவை நேரடியாக மேற்கொள்வோரும் உளர்; இல்லறத்தின் பயன்துய்த்துப் பின்னர் துறவறம் சிறந்தவரும் உளர்.

துறவு மார்க்க ஞானம் என்பது பொன்னில் பதித்த ரத்தினம் ஒக்கும்; இல்லற மார்க்க ஞானமானது இரும்பில் பதித்த ரத்தினம் ஒக்கும் என்பர் ஞானியர்.

துறவு வாழ்வு மனிதனின் ஆறாவது புலனாகிய மனதை அடக்கும் வித்தை. மனம் பற்றுகளால் துன்பத்தில் வீழும் போது, அதை உறுதி என்னும் கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழக்குவதே சரியான துறவுப் பயிற்சியாம். இதற்கு யோகம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்தப் பயிற்சியை சிலர் தனியிடங்களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள். வேறுசிலர் மூச்சைக் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள்: தனியே இருந்து ஜபம் செய்து பார்க்கிறார்கள்.

ஆனால், இவற்றிலெல்லாம் மனம் அடங்கி விடாது. உலகத்தாருடன் கூடி அவர்களைப் போலவே தொழில் செய்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடி, தன் மனத்தைக் கட்டக்கூடிய திறமைதான் துறவின் வெற்றி, மற்ற முயற்சிகளெல்லாம் வீண். தண்ணீரிலே இருந்தும் ஒட்டாது இருக்கிற தாமரை இலையைத் துறவுக்குத் தகுந்த உவமையாக்குவர்.

எல்லா சமயங்களும் துறவறத்தைச் சுட்டியபோதும், துறவு சமயம் சார்ந்தது அன்று. அது மானுடம் சார்ந்தது; உயிர்க்குலம் சார்ந்தது. மண்ணால் செய்த ஓட்டினையும் பொன்னால் செய்த அணியினையும் ஒன்றே என்று பற்றற்று நோக்கும் நற்குணமே துறவின் சிறப்பு.

சங்க இலக்கியம் துறவைப் பேசுகிறது. காப்பியங்கள் விவரிக்கின்றன. சன்னியாசம் என்று இந்து மதம் துறவைக் குறிக்கிறது. அருளாளர்கள் பலர் துறவு போற்றியவர்களே. பௌத்தம் புத்தர் பின்பற்றிய துறவைச் சுட்டி நிர்வாணம் என்றும், முழு விடுதலை யைப் பெருந்துறவு அல்லது பரி நிர்வாணம் என்றும் குறிக்கிறது. சமணம் சாரணம் என்கிறது. கிறிஸ்தவத்தில் இயேசுவின் வாழ்க்கையே துறவின் சான்று. இஸ்லாம் இல்லறத்தை மறுக்காது பற்றில்லாப் பிணைப்பு மூலம் துறவுக்கு வழிகாட்டுகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

3 mins

January 03, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்

போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாது அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

time to read

1 mins

January 03, 2026

Dinamani Thoothukudi

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

January 03, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Thoothukudi

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

புத்தாண்டு சபதங்கள்!

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.

time to read

2 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பதினாறு பேறு தரும் பரமன்

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை

அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 01, 2026

Dinamani Thoothukudi

தில்லி: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.8 கோடி நகைகள் பறிமுதல்

தில்லியில் கருப்புப்பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.

time to read

1 min

January 01, 2026

Translate

Share

-
+

Change font size