The Perfect Holiday Gift Gift Now

அவசர ஊர்திகளுடன் போராடும் நோயாளிகள்

Dinamani Thoothukudi

|

July 08, 2025

‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பொருந்தும்.

- எஸ். ஸ்ரீதுரை

‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பொருந்தும். வீடுகள் அல்லது விபத்துத் தலங்களிலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தீவிர நோயாளிகளாயினும், உயர் மருத்துவ சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளிலிருந்து பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற நோயாளிகளானாலும் சரி, அவர்களைச் சுமந்து செல்ல அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) எடுத்துக்கொள்ளும் மணித்துளிகளுள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானதாகும். எனவேதான், எந்தப் போக்குவரத்து நெரிசலிலும், அவசர ஊர்திகள் தடையின்றிச் செல்வதற்கு வழிவிடப்படுகிறது.

மக்கள்தொகையும் பெருகி, மருத்துவமனைகளும் அதிகரித்துவிட்ட இன்றைய காலச்சூழலில் நமது சாலைகளில் முன்பைவிட அதிகமான எண்ணிக்கையில் அவசர ஊர்திகளை நாம் காண்கிறோம். அதே சமயம், பிற சேவைத் துறைகளைப் போன்று, மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியாகிய இந்த அவசர ஊர்தி சேவைகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய குறைபாடுகள் சில இருக்கவே செய்கின்றன.

கடந்த வாரம் உதகை மாவட்டம், குன்னூரில் வேகத் தடை மீது ஏறி இறங்கிய அவசர ஊர்தியின் பின்பக்கக் கதவு திறந்துகொள்ள, அதிலிருந்த நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்தார். அதைப் பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் சட்டென்று நின்றதால், அவ்விடத்தில் பெரிய விபத்து எதுவும் நிகழ்வது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் கூச்சலிட்டு ஆம்புலன்ஸை நிறுத்தச் சொன்ன பிறகே அதன் ஓட்டுநருக்கு நடந்த விஷயம் புரிந்திருக்கிறது.

உயிர்காக்கும் உன்னதமான சேவையாகிய இந்த அவசர ஊர்தி சேவையில் பல்லாயிரக்கணக்கான ஓட்டுநர்களும், உடன் பயணிகளுக்கும் உதவியாளர்களும் நாள் முழுவதும் உழைத்து வருவது உண்மை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Thoothukudi

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: போட்டி ஏற்பாடுகள் தொடக்கம்

மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

ஜி.டி.நாயுடு ஆவண இணையப் பக்கம் தொடக்கம்

அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் அரிய ஆவணங்கள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

time to read

1 mins

January 05, 2026

Dinamani Thoothukudi

மதுரையில் ஜன.7-இல் புதிய தமிழகம் கட்சி மாநாடு

புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜன.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Thoothukudi

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Thoothukudi

வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை

கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 mins

January 05, 2026

Translate

Share

-
+

Change font size