Versuchen GOLD - Frei

தாய் - தந்தையைப் போற்றுவோம்!

Dinamani Thoothukudi

|

June 14, 2025

ஆதிசங்கரர் மாபெரும் துறவி. எதன் மீதும் பற்றுக்கொள்ளாத அவரால் தாய்ப் பாசத்தைத் தள்ளிவிட முடியவில்லை. அன்புத் தாயின் உயிர் துன்ப உலகை விட்டுப் பிரியும் தருணத்தில் அவர் உடன் இருந்தார். உடலுக்குத் தீ மூட்டும் கடமையைச் செய்தார். அப்போது புகழ்பெற்ற மாத்ரு பஞ்சகம் பாடினார்.

- முனைவர் மலையமான்

சிலப்பதிகாரத்தை 'ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும்' என்று தொடங்கினார் இளங்கோவடிகளார். அவரைப் பின்பற்றும் முறையில் இன்று அன்னையைப் போற்றுவோம், தந்தையைப் போற்றுவோம்' என்று தமிழர்கள் சொல்லில் நாட்ட வேண்டும், செயலிலும் காட்ட வேண்டும். ஏனெனில், இவர்கள் தான் அடுத்துவரும் இளம் தலைமுறையினரைக் காப்பாற்றுகின்றனர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தொடர் ஒலி, காற்றுப்போல் எங்கும் பரவியிருந்தது. செந்தமிழ் இலக்கியங்கள் இந்தச் சிறந்த கருத்தை நெஞ்சில் தங்கச் செய்தன. புலவர் உலகநாதன் மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம் என்று ஓதினார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒளவையார்.

ஆசாரக்கோவை என்பது சங்கநூல். அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தனக்கு முன் பிறந்தவன் ஆகிய இவர்களைத் தெய்வம் என்று எண்ணி வணங்கு என்று அது மனத்தில் பதிவு செய்தது.

தாயைவிடச் சிறந்த உறவினர் இல்லை என்று விளம்பிநாகனார் அறிவித்தார். அவர் மேலும் ஒரு மேன்மைக் கருத்தை உரைத்தார். எல்லாக் கடவுளையும்விட, தாயே உயர்ந்தவள்; தாயோடு ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய கடவுளே இல்லை என்றார் அந்தப் பல்கலைச் செல்வர்.

ஈன்றாளொடு எண்ணக் கடவுளும் இல் (நான்மணிக்கடிகை - 57) குமர குருபரர் பற்றற்ற நற்றவப் புலவர், தந்தையும் தாயும் இறைவனாவர் என்றார் அவர் (நீதிநெறி விளக்கம் 27) தாயும் நீயே தந்தை நீயே என்றார் சம்பந்தர்; தாயுமாய் எனக்கே என்றார் அப்பர். தந்தை, தாய் ஆகியோரை வழிபட வேண்டும் என்றார் சொல் வல்ல நல்லாதனார் (திரி கடுகம்).

அம்மா மண்ணுள் மறைந்துவிட்டால், பிறகு சுவையான உணவு கிட்டாது என்று நீதிவெண்பா எண்ணச் செய்தது.

கருவை அன்னை பத்து மாதம் சிப்பிக்குள் முத்துப்போல் சுமக்கிறாள். அவள் பிரசவ நேரத்தில் வலி தாங்க முடியாமல் மிகப் பெரும் வேதனை பெறுகிறாள்.

சிலசமயம் மகப்பேறின்போது சில பெண்களின் உயிர்கள் விடை பெற்றுக் கொண்டு சென்றதுண்டு; பெற்ற குழந்தையை, இமை கண்ணைக் காப்பதுபோல் அவள் காப்பாற்றுகிறாள். குழந்தைக்கு நோய் வந்தால் அவள் மருந்து சாப்பிடுகிறாள்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Thoothukudi

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Thoothukudi

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Thoothukudi

காலமானார் காந்தியவாதி மா.வன்னிக்கோன்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும், காந்தியவாதியுமான மா.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Thoothukudi

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Translate

Share

-
+

Change font size