Facebook Pixel நகைக் கடன் நிபந்தனைகள்: ஒரு பார்வை | Dinamani Salem – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

நகைக் கடன் நிபந்தனைகள்: ஒரு பார்வை

Dinamani Salem

|

May 26, 2025

நகைக்கான அடமான விதிகளை அதிகரிக்கும்போது வங்கிகளை நாடாமல், அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை மக்கள் அவசரத் தேவைக்காக நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், அதிக வட்டியும், நகைகளைத் திருப்ப முடியாத சூழலும் ஏற்படும்.

- முனைவர் வைகைச்செல்வன்

தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நகைக் கடனில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், இவை எளிய நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஆகவே, தங்க நகைகள் மூலம் கடன் பெறும் நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன.

இந்தியாவில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் தருண் சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தங்க நகைக் கடனில் முறைகேடுகள் நடப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தங்க நகைகளை அடமானம் வைத்துப் பெறப்படும் கடன்கள் தொடர்பான ஆய்வை ரிசர்வ் வங்கி மேற்கொண்டபோது இதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் இருப்பதாகவும், அதை மாற்றம் செய்ய வேண்டும் என்பதும் ரிசர்வ் வங்கியின் நோக்கமாக இருந்தது.

தங்க நகைக் கடன்கள் பெறுவதற்கும், அவற்றை மதிப்பிடுவதிலும் குறைபாடுகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. வாடிக்கையாளர் இல்லாமல் தங்கத்தை மதிப்பிடுதல், தங்க நகைக் கடனில் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாதது, வாடிக்கையாளர் பணம் செலுத்தத் தவறினால், நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது உள்ளிட்டவை இவற்றின் பலவீனமான அம்சங்களாகும்.

ஆகவேதான், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள் நகைக் கடன்கள் தொடர்பான செயல்முறைகளை மாற்றம் செய்து புதிய கொள்கைகளை வெளியிட வேண்டும் என்று கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில்தான், தங்க நகைக் கடன் தொடர்பாக 9 வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இவை பேசு பொருளாக மாறி நடுத்தர மக்களை நசுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Salem

Dinamani Salem

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Dinamani Salem

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

May 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

அப்துல் கலாம் தலைமையில், அணு சக்தி துறையின் தலைவராகப் பணியாற்றிய முனைவர் ஆர். சிதம்பரம் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இரண்டாவது முறையாக 'ஆபரேஷன் சக்தி' என்ற பெயரில், மூன்று அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தி இந்தியா முதல் வெற்றி கண்டது.

time to read

3 mins

May 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் (51) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்

பிரதமர் மோடி கடும் விமர்சனம்

time to read

1 mins

May 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Salem

இடைக்கால பேரவைத் தலைவராக மு.வீ.கருப்பையா பதவியேற்பு

17-ஆவது சட்டப்பேரவை திங்கள்கிழமை (மே 11) கூடும் நிலையில், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் (தனி) தொகுதி உறுப்பினர் மு. வீ. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் பதில்

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size