Versuchen GOLD - Frei

தேசியமும் தர்மமும் காக்க...

Dinamani Pudukkottai

|

January 07, 2026

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

- கோதை ஜோதிலட்சுமி

தேசியமும் தர்மமும் காக்க...

அந்நியரின் ஆதிக்கத்தைக் கண்டு பாரதி கொதித்துப் போனார், அவர்களை நம் நாட்டிலிருந்து விரட்ட நினைத்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அவருடைய லட்சியம் அதுவல்ல. உலகத்தின் கண்முன் நம் நாட்டின் மதிப்பை உயர்த்துவதும், ஆணும் பெண்ணும் அனைவருமான ஒரு புதுவகை மனிதர்களால் ஆன ஒரு நாட்டை அவர் கட்டியெழுப்ப நினைத்ததும்தான்' என்று எழுதினார்.தனிப் பெரும் ஆளுமையான மகாகவி பாரதி தமிழர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். பாமரர்களும் அறிந்த பண்டிதர். தேசத்தின் மீது அவருக்கு இருந்த பக்தியும், இந்த மண்ணில் பின்பற்றப்பட்ட தர்மத்தின் மீதான பற்றுதலும் அவரது அடையாளமாக இருக்கின்றன.

பாரதியின் கவிதைகள், இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. தேசபக்திப் பாடல்கள், தெய்விகமும் வேதாந்தமும் போற்றும் பாடல்கள், தேசபக்திப் பாடல்களுக்குள் அறமும், தெய்விகத்துக்குள் தேச சிந்தனையும்கூட இழையோடியிருக்கும். 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' இது எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண் என்று உரிமை கொண்டாடும் போதே, 'துங்கம் உயர்ந்து வளர் கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே' என்பார்.

இதை 'வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ?' என்று நமது அடையாளம் ஆன்மிகமும் வேதங்களும் என்பதில் பாரதி மாறுபட்டதே இல்லை.

தமிழ், தேச விடுதலை, பெண் விடுதலை, சமூகநீதி என்று சமூகத்தைச் சீரமைக்க முயன்றவர் பாரதி.

புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதைவிட நமது பெருமைமிகு வரலாற்றை மீண்டும் நனவாக்க வேண்டும் என்ற விருப்பமே அவருக்கு நிறைந்திருந்தது. அதை ‘புதுமைப்பெண்' கவிதையில் குறிப்பிடுகிறார்.

பேராற்றல் கொண்ட பெண்கள் உலகையே வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த வல்லவர்கள் என்று சொல்ல வந்தவர். அப்போதும், இந்த தர்மத்தின் மீதான பற்றினை,

'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்' என்கிறார்.

புதுமைப் பெண்கள் மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம் என்றவர், அப்படித்தான் என் தேசத்தின் பெண்கள் சிறப்பாக வேதங்கள் விளங்கிய நாளில் வாழ்ந்தார்கள் என்றும் நினைவூட்டுகிறார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Pudukkottai

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

பாஜக தேசியத் தலைவராகிறார் நிதின் நவீன்!

பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவரும் அக்கட்சியின் உயரிய பொறுப்பை வகிக்கும் இளம் தலைவராகவும் அறியப்படும் நிதின் நவீன் (45), இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Pudukkottai

வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை

திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக பிணையில் வெளியே வந்தவரும், அவரது மனைவியும் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size