Versuchen GOLD - Frei
வரலாறு மன்னிக்காது!
Dinamani Pudukkottai
|August 11, 2025
இந்தியா, ரஷியா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால், இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைக்கான நமது நிலை.
-
ஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இந்தியப் பொருள்களின் மீது 25% வரி விதித்திருக்கிறார்.
ஏற்கெனவே, ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களிடம் தங்களின் தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிறுவக் கூடாது என எச்சரித்து வந்த டிரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும், உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுக ஆதரவு வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை இந்தியா நிறுத்தா விட்டால், வரியை மேலும் அதிகரிப்பேன் என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திலேயே இந்தியா மீதான வரியை மேலும் 25% உயர்த்தி, 50% அதிகரித்திருக்கிறார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருவதால், அதற்கு அபராதமாக இந்த 25% வரியை உயர்த்தியிருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த அபராத வரி விதிப்பு அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவால் 50% வரி விதிப்புக்கு உள்ளான நாடாக இருக்கிறது இந்தியா.
ஒரு நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது அந்நாட்டின் உரிமை. அதை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கை நியாயமற்றது; காரணமற்றது.
ரஷியாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குகிறோம்; ஆனால், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இதற்கு உக்ரைன் மீதான போர்தான் முக்கியக் காரணம். நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 36% முதல் 38% வரை ரஷியாதான் நிறைவு செய்கிறது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், இந்தியா அதை ஏற்கவில்லை. தேச நலன்தான் முக்கியம் என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.
Diese Geschichte stammt aus der August 11, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Pudukkottai
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Pudukkottai
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Dinamani Pudukkottai
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Translate
Change font size
