சமூக ஒற்றுமையும் அரசமைப்பு சாசனமும்...
Dinamani Pudukkottai
|July 14, 2025
அரசுகள் கொண்டுவரும் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பதை அரசுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால், அதற்கான மூலக் காரணத்தைத் தொட அரசுகள் மறுக்கின்றன.
அறிவார்ந்த சமூகச் சிந்தனையாளர்கள் இன்று அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க அரசமைப்புச் சாசனத்தின் அடிப்படை விழுமியங்களை மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கக் கொள்கை ஒன்றை உருவாக்குங்கள் என்பதுதான் அந்தக் கோரிக்கை. இவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்; இவர்கள் ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று பணியாற்றிய சமூக உணர்வாளர்கள்.
ஏன் இந்தக் கோரிக்கையை வைக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் காட்டும் காரணமும், ஆதாரமும் யாராலும் மறுக்க இயலாது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அதிகாரத்தைப் பிடிக்க நடத்தப்படும் போட்டியில் வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள நம் அரசியல் கட்சிகள் செய்யும் செயல்கள் சமூக ஒற்றுமையைத் தகர்த்துக் கொண்டே வருகின்றன. அதுமட்டுமல்ல சமூகப் பிணக்குகளும், வன்முறையும் அதிகரித்து வருகின்றன.
சமூகப் பிணக்கும், சமூகப் பிரிவினைகளும், எல்லையில்லா ஏற்றத்தாழ்வுகளும், வன்முறையும் மக்களாட்சிக்கு எதிரான கூறுகள். இவை அனைத்தும் ஒரு நாட்டில் செயல்பட்டால் மக்களாட்சியில் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கொண்டு சேர்க்க இயலாது.
இந்தியாவில் 146 கோடி மக்களில் 82 கோடி மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்புக்குப் பொது விநியோகத் திட்டத்தில் கிடைக்கும் விலையில்லா உணவுப் பொருள்களை நம்பி இருப்பதும், 42 கோடி மக்கள் எந்தச் சமூகப் பாதுகாப்பும் இன்றி வாழ்வதும் இதன் விளைவுகள் தான்; இதைத்தான் உலக வங்கி நம்மைச் சரி செய்யக்கூறி அறிவுறுத்துகிறது. இந்தச் சூழல் மக்களாட்சிக்கும் நல்லதல்ல; சமூக ஒற்றுமை, அமைதி, மேம்பாடு இவற்றுக்கும் உகந்தது அல்ல.
இந்தச் சூழலை இனிமேலும் நாம் அனுமதித்தால் மக்களை நம் அரசியல் ஆளுகைச் செயல்பாட்டால் வன்முறைக்குள் தள்ளுகிறோம் என்பதுதான் பொருள். இந்த நிலையில்தான், நம் அரசியல் கட்சியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற அரசியலை முன்னெடுத்து, இந்திய மேம்பாட்டு வரலாற்றில் எந்தெந்த ஜாதிகள் மேம்பட்டிருக்கின்றன, எந்தெந்த ஜாதிகள் மேம்பட முடியவில்லை என்பதைக் கண்டறிய முயல்கின்றன.
Diese Geschichte stammt aus der July 14, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Pudukkottai
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Pudukkottai
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Pudukkottai
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Pudukkottai
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Pudukkottai
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Pudukkottai
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Pudukkottai
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Pudukkottai
கலப்படம் தடுக்க புதிய பால் கொள்கை: தமிழக அரசு முடிவு
பாலில் கலப்படத்தை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Pudukkottai
ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்
கட்சி விரோத செயல்பாடு தொடர்பாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் அளிக்கக் கோரி ஜி.கே. மணிக்கு, அன்புமணி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
December 19, 2025
Translate
Change font size

