Versuchen GOLD - Frei
பொறுப்புகளை ஏற்கும் அரசு தேவை
Dinamani Pudukkottai
|June 17, 2025
மக்களுக்கு தரமான வேலைவாய்ப்பு தேவை; இதற்கு ஒரு பொருத்தமான திட்டமிடுதல், நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள், அதற்கான வழிமுறைகள் தேவை. அனைத்தையும் தனது பொறுப்புகளாக ஏற்றுக்கொள்ளும் அரசு தேவை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2025-26-ஆம் ஆண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இது ஜப்பானின் 4,186.431 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 586 மில்லியன் டாலர் (ரூ.5,011 கோடி) அதிகமாகும். இது இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற்றும், ஜப்பானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளும்.
இப்போதைய நிலையில் அமெரிக்கா (30.5 டிரில்லியன்), சீனா (19.2 டிரில்லியன்), ஜெர்மனி (4.74 டிரில்லியன்) ஆகியவை இந்தியாவைவிட உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.
நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த சாதனை குறித்துப் பேசியபோது இந்தியர்களுக்கு பெருமையளிப்பதாக இருந்தது.
அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் என்னவென்றால், இந்தியா 2028-ஆம் ஆண்டில் 5.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் மூன்றாவது இடத்துக்கு உயரும்; ஜெர்மனியை முந்திச் செல்லும் என்பதாகும். இந்த முன்கணிப்புகளுக்காக நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்தியா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக ஏற்கெனவே உயர்ந்திருக்க வேண்டும் என்பது தான் உண்மை. மூன்றாவது, நான்காவது இடத்துக்கு போட்டியிடும் நாடாக இருந்திருக்கக் கூடாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை நாம் கொண்டிருக்கிறோம். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் உலகின் செல்வத்திலும், வருவாயிலும் இந்தியா 18 சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது வெளியாகியுள்ள கணிப்புகள் உருவாக்கிய மகிழ்ச்சியிலேயே நிலை கொண்டுவிடாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது. ஏனெனில், உண்மை நிலவரத்தை நேர்மையாக ஒப்புக்கொள்வது நமது சரியான இடத்தை அடைவதற்கான பாதையை வடிவமைப்பதற்கு மிக அவசியம்.
இதற்காக நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் வளர்ச்சி தொடர்பாக நமக்கு கூறப்பட்டுள்ள எண்கள் சரியானதுதானா?; இரண்டாவதாக அவை சரியாக இருந்தால் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு இந்த வளர்ச்சி நமது நாட்டுக்கு போதுமானதா?; மூன்றாவதாக சமூகநீதியை எட்டுவதற்கு இந்த வளர்ச்சி மட்டும் போதுமானதா? என்பதாகும். இது தவிர நாட்டின் பொருளாதாரம் புதிய உச்சங்களை எட்டும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு சிறப்பாக மேம்பட்டுள்ளது என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
Diese Geschichte stammt aus der June 17, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
பியோன் போர்க் சாதனையை சமன் செய்த அல்கராஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
திமுகவில் இணைந்தார் அமமுக துணை பொதுச் செயலர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முன்னாள் துணை பொதுச் செயலர் கடம்பூர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
இஷான், சூர்யகுமார் அதிரடி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை?
குழு அமைத்தது ஆந்திர அரசு
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
தமிழகம் வழியாக 3 அமிருத் பாரத் விரைவு ரயில்கள்
கேரள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
1 mins
January 24, 2026
Dinamani Pudukkottai
பிரதமரின் பலவீனத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்
கேரள சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தை மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் புறக்கணித்தார்.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் 10 கேள்விகள்
பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் குறிப் பிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 கேள் விகளை எழுப்பியுள்ளார்.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி
'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
January 24, 2026
Dinamani Pudukkottai
ஜன.27-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு
1 min
January 24, 2026
Translate
Change font size

