Versuchen GOLD - Frei
புதிய கல்லூரிகள் - கவனம் வேண்டும்
Dinamani Pudukkottai
|June 05, 2025
ஓட்டுமொத்த அளவில் உயர்கல்வி சேர்க்கையில் 47 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
இதைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலைக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் மட்டுமின்றி, மக்கள் மத்தியில் உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு மேம்பட்டிருக்கிறது என்பதும் காரணம்.
பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2021-22-ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது; இது 2023-24-ஆம் கல்வியாண்டில் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 165 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பெரும்பாலான கல்லூரிகள் நகர்ப்புறங்களில் அமைந்திருந்தாலும் அந்தக் கல்லூரிகளில் படிக்கும் அதிகப்படியான மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஆண்டுதோறும் உயர் கல்வியில் இடைநிற்றல் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது.
இந்த நிலையில், உயர்கல்வி சேர்க்கையை மேம்படுத்தும் நோக்கில் 2025-26-ஆம் ஆண்டுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் தமிழகத்தில் 11 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பண்ருட்டி, குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், கொளக்காநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஊர்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Diese Geschichte stammt aus der June 05, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Pudukkottai
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Pudukkottai
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Dinamani Pudukkottai
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Translate
Change font size
