Versuchen GOLD - Frei

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

Dinamani Puducherry

|

December 24, 2025

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்தனர்.

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

அவர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜோதிபாசுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 ரோந்துப் படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அந்தப் படகை சிறைபிடித்தனர்.

படகிலிருந்த பிரதாப் (28), சந்தியா நிவாஸ்தான் (33), ஜேம்ஸ்ஹெய்டன் (23), காயல்ராஜ் (23), டோஜா (21), ஆண்டனிடெல்மேன் (32), ஆக்போ நிஜோ (17), மரியா ஆட்டோ (19), கோர்ப்பசேவ் (35), மாதன்சன் (28), நிமல் (31), ஆண்டனி தில்மென்(32) ஆகிய 12 மீனவர்களைக் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் அழைத்துச் சென்றனர். மேலும், இந்த மீனவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.

மீனவர்கள் 12 பேர் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவர்களை வரும் ஜன.5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 12 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Puducherry

அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை

உச்சநீதிமன்றம் விளக்கம்

time to read

1 mins

January 09, 2026

Dinamani Puducherry

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Puducherry

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Puducherry

பிரபல சூழலியலாளர் மாதவ் காட்கில் காலமானார்

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புக்கு பாடுபட்ட பிரபல சூழலியலாளர் மாதவ் காட்கில் (83) உடல்நலக் குறைவால் காலமானார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size