Versuchen GOLD - Frei
கற்கை நன்றே கற்கை நன்றே
Dinamani Puducherry
|June 27, 2025
பள்ளிக் கல்வித் துறையின் பெரும்பாலான நல்ல முன்னெடுப்புகள் தேசிய கல்விக் கொள்கையோடு ஒத்திருக்கின்றன. மாறுபாடு கொள்ளும் இடம், மொழிக் கொள்கையில்தான். இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்பதுதான் பிணக்குக்கான காரணமாக இருக்கிறது.
கல்வி தனி மனிதனின் வாழ்வையும் சமுதாயத்தின் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் சக்திவாய்ந்த கருவி. மனிதர்களை அறியாமையிலிருந்து விடுவித்து, அறிவொளியை நோக்கி இட்டுச் செல்லும் சாதனம். 'கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால் மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம்' என்று குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் பாடுகிறார். கல்வியினால்தான் சமுதாயத்தில் நிலவும் அறியாமை, மூடநம்பிக்கைகள், பாகுபாடுகளை நீக்கி, நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும். சமத்துவ சமுதாயம் சாத்தியமாகும். கல்வியில் சிறந்தவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் மேம்பாடு போன்றவற்றால் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள்.
இத்தகைய கல்வியைக் குழந்தைப் பருவம் முதலாகத் தொடங்கிக் கற்கவேண்டும். அதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசும் இதற்கான கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்களையும் அதற்கான நிதியைப் பெற்றுக்கொண்டு மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உறுதிசெய்ய 2009-ஆம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் மாறிவரும் உலகின் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியை வழங்கவும் தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டுவரப்பட்டுள்ளது.
சமக்ர சிக்ஷா திட்டம் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டம் பள்ளிக் கல்வியை முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம். பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சமமான மற்றும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது.
கல்வியை அணுகுவதில் புதிய முறைகளை ஏற்படுத்துதல், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள்); குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்தல் மற்றும் இடைநிற்றலைக் குறைத்தல்; பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்புப் பயிற்சிகள் அளித்தல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
Diese Geschichte stammt aus der June 27, 2025-Ausgabe von Dinamani Puducherry.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry
Dinamani Puducherry
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
ஆட்சியில் பங்கு சாத்தியம்
ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Puducherry
ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு
திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Translate
Change font size
