Versuchen GOLD - Frei
நெகிழி மாசுபாடு ஆயுளைக் குறைக்கும்!
Dinamani Puducherry
|June 06, 2025
ஒவ்வோர் ஆண்டும் 100 கோடி டன் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் கடலில் கலப்பது, நீண்டகால அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எச்சரிக்கை மணி; இந்தக் கழிவு கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும்; மேலும், உணவுச் சங்கிலியையும் பாதிக்கிறது; இறுதியில் மனிதர்களையும் பாதிக்கிறது.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ், 1973 முதல் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2025) உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தில், உலக அளவில் நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த கொரிய குடியரசு முடிவு செய்துள்ளது.
வளரும் நாடுகளில் தினமும் 50 லட்சம் மக்கள் சுற்றுச்சூழல் நச்சால் பாதிக்கப்படுகின்றனர்; மேலும், வளரும் நாடுகளில் ஏற்படும் இறப்புகளில் 25 சதவீதம், சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகின்றன. எரிமலைகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவைவிட (கார்பன் டை ஆக்சைடு) 60 மடங்கு அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு, மனித நடவடிக்கைகள் மூலம் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகிறது.
கரியமிலவாயு, கந்தக அமிலம், ஹைட்ரஜன் சல்பைடு, ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரஜன் ஃபுளோரைடு உள்ளிட்ட பல்வேறு வாயுக்களையும் துகள்களையும் வெளியிடுவதன் மூலம் வளிமண்டல மாசுபாட்டுக்கு எரிமலைகளும் பங்களிக்கக்கூடும்.
இது அமில மழை, புகைமூட்டத்துக்கு வழிவகுக்கும்; மேலும், மனித ஆரோக்கியம், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடும். காட்டுத் தீ, தூசு புயல்கள் மற்றும் தாவரங்களிலிருந்து ஆவியாகும் கரிம சேர்மங்களின் இயற்கையான உமிழ்வு போன்ற பிற இயற்கை மூலங்களும் வளிமண்டல மாசுபாட்டுக்கு காரணமாகின்றன.
காற்றில் கலக்கும் கரியமில வாயுவை உள்வாங்கி நிலத்தின் நீரையும் உறிஞ்சி, பின் தன்வசம் இருக்கும் பச்சையத்தில் சூரிய ஒளியில் மாவுச்சத்து தயாரிக்கும் ‘இயற்கைச் சமையலறை’யான தாவரங்களை கூடுதலாக வளர்க்க வேண்டும்.
இயற்கை மரங்களைவிட வளி மண்டலத்திலிருந்து கரியமில வாயுவை அரித்து எடுக்க 1,000 மடங்கு அதிக திறன்கொண்ட ‘இயந்திர மரங்களை’ ஓர் அமெரிக்க ஆய்வகம் உருவாக்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வடிவமைப்பு, பொறியியல் பணிகளுக்குப் பிறகு, அயர்லாந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ‘மரப்பண்ணைகளை’ உருவாக்க மாதிரியை வடிவமைத்து வருகிறார்கள்.
Diese Geschichte stammt aus der June 06, 2025-Ausgabe von Dinamani Puducherry.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry
Dinamani Puducherry
பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்
கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்
75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது
இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Puducherry
தேசியமும் தர்மமும் காக்க...
மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.
3 mins
January 07, 2026
Dinamani Puducherry
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
37% உயர்ந்த செயில் விற்பனை
அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Translate
Change font size
