Versuchen GOLD - Frei
வழிகாட்டுதல் அறிக்கை
Dinamani Perambalur & Ariyalur
|August 21, 2025
மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் நல்ல ஆட்சியாக அமையும. ஆட்சியாளர்கள் மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய குறைகள், பிரச்னைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முடியும்.
-
அதனால்தான் ஏனைய ஆட்சிமுறைகளைவிட மக்களாட்சி மேம்பட்டது என்று கருதப்படுகிறது.
அமைச்சர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பார்கள் என்றாலும்கூட திட்டங்களும் செயல்பாடுகளும் அதிகாரிகளால்தான் நடைமுறைப்படுத்தப்படும். மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நேரடியான தொடர்பு பெரும்பாலும் இருப்பதில்லை. அதிகாரிகளும் பொதுமக்களைச் சந்திப்பதில் விருப்பம் காட்டுவதில்லை. அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்கிற தயக்கம்தான் அதற்குக் காரணம்.
இந்தப் பின்னணியில்தான் கடந்த மாதம் இந்தியாவின் அமைச்சரவைச் செயலர் டி.வி.சோமநாதன் அனைத்துத் துறையின் செயலர்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு அரசில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான டி.வி.சோமநாதன். 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலர்களில் ஒருவராக இருந்தவர். 2011-2016 அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராக அவரால் செயல்பட முடிந்ததற்குக் காரணம், தாமரை இலைத் தண்ணீராக தன்மீது அரசியல் சற்றும் ஒட்டிக்கொள்ளாமல் செயல்பட முடிந்தது என்பதுதான்.
Diese Geschichte stammt aus der August 21, 2025-Ausgabe von Dinamani Perambalur & Ariyalur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
மணிப்பூர்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினர் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Translate
Change font size
