Versuchen GOLD - Frei
இலக்கியச் செல்வர் - நெஞ்சம் நிறைந்த நினைவுகள்!
Dinamani Perambalur & Ariyalur
|April 10, 2025
முதல்கை நண்பரும் இலக்கியச் செல்வருமான குமரி அனந்தனும் நானும் கடந்த காலத்தில் தோளோடு தோள் இணைந்து பெருந்தலைவர் காமராசரின் நிழலில் தொண்டாற்றிய அந்த நாள்கள் எங்கள் வாழ்க்கையின் பொன்னான நாள்களாகும்.
-
மதுரையில் உள்ள வெற்றிப் பயிற்சி கல்லூரியில் அவர் பணியாற்றி வந்தார். நானும், அவரும் அப்போது நண்பர்களானோம். இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டோம். அரசியலில் அவர் காங்கிரசுக் கட்சியில் இருந்தார். நான் அண்ணன் ஈ.வெ.கி. சம்பத் நடத்திய தமிழ்த் தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருந்தேன். கட்சி வேறுபாடுகளுக்கப்பால் எங்கள் நட்பு தொடர்ந்தது.
புவனேஸ்வரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சோஷலிச கருத்துடையவர்கள் அனைவரும் காங்கிரஸில் வந்து இணையுமாறு காமராசர் விடுத்த அழைப்பினை ஏற்றுத் தமிழ்த் தேசிய கட்சியைக் காங்கிரஸுடன் ஈ.வெ.கி. சம்பத் இணைத்தார். எங்கள் நட்பு இன்னும் நெருக்கமாயிற்று.
1965-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் அன்று சென்னையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு அவரை தமிழக இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராகத் தேர்ந்தெடுத்தது. மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அவரின் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் இயக்கம் தீவிரமாக பணியாற்றியது.
1968-ஆம் ஆண்டு காமராசர் சோவியத் நாடு சென்று திரும்பியதையொட்டி அவரை வரவேற்கும் வகையில் மாவட்டந்தோறும் இளைஞர் காங்கிரஸ் பேரணிகளை நடத்துவதென முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டோம். அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் காங்கிரஸ் பேரணிகள் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டன.
1967-ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ஆம் நாள் முதல் பண்டித நேரு பிறந்த நவம்பர் 14-ஆம் நாள் வரை 44 நாள்களுக்குக் குமரி முனையில் தொடங்கி சென்னை வரை 625 கல் தொலைவில் குமரி அனந்தன் தலைமையில் 100 இளைஞர்கள் காந்திய நெறி நடைப்பயணம் தொடங்கினர்.
குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற அறநெறிப் பயணம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் புத்துணர்வை ஊட்டியது.
1966-ஆம் ஆண்டு ஜூன் 20 முதல் 10 நாள்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பச்மாரி என்னும் மலை நகரில் இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாம் ஒன்று அகில இந்திய அளவில் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து குமரி அனந்தன், முதுகுளத்தூர் சோ. பாலகிருட்டிணன், சென்னையைச் சேர்ந்த கேசவ மணி ஆகியோருடன் நானும் அந்த முகாமில் கலந்து கொண்டேன்.
Diese Geschichte stammt aus der April 10, 2025-Ausgabe von Dinamani Perambalur & Ariyalur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent?Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
நியமன ஆணைகள் தாமதம் மருத்துவர்கள் முற்றுகைப் போராட்டம்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தை அவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
1 min
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு
உயர்நீதிமன்றம் பாராட்டு
1 min
May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur
பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்
'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 mins
May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட ரத்து: தமிழக அரசு உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Perambalur & Ariyalur
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Translate
Change font size

