Versuchen GOLD - Frei
அரசமைப்புச் சாசனம் எனும் அரண்!
Dinamani Namakkal
|November 29, 2025
அரசமைப்புச் சாசன தினம் (நவம்பர் 26); இது நாள்காட்டியில் பதிந்த வெறும் தேதியல்ல; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எனும் அறிவுச் சுடரின் தலைமையில், 'இந்திய மக்கள் அனைவரும்' எனும் ஏகோபித்த உணர்வுடன், 1949 நவம்பர் 26-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித அக்னி சாசனம். 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்த தர்மச் சக்கரம், கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டை நெறி பிறழாமல் தாங்கும் தூணாக ஓங்கி நிற்கிறது. அம்பேத்கரின் உழைப்பைப் போற்றும் வகையில், 2015 முதல் இந்நாள் (நவ.26) தேசிய சட்ட தினமாகப் பொலிவுறுகிறது.
அம்பேத்கர் உரைத்ததுபோல், 'சட்டம் என்பது வழக்குரைஞரின் ஏடல்ல; அது ஒரு தேசத்தின் உயிர்ப்பை ஊட்டும் மூல ஆதாரம்'. உலகில் பல நாடுகள் சர்வாதிகாரச் சேற்றில் சறுக்கியபோது, இந்தியா மட்டும் மக்களாட்சியின் இலக்கணம் குலையாமல் உறுதியுடன் நிற்கக் காரணம், நம் சாசனம் அமைத்த அசைக்க முடியாத அடிக்கட்டுமானமே.
'அரசமைப்புச் சாசன தினம்' கொண்டாடும் இந்த வரலாற்றுத் தருணத்தில், நம் சட்டம் நிகழ்த்திய அபூர்வ அற்புதங்களையும், அது இன்னும் முழுமையாக எட்ட முடியாமல் தவிக்கும் சவால்களையும் நாம் சீர் தூக்கிப் பார்ப்பது காலத்தின் கட்டாயம்.
ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற எவ்விதப் பேதமும் இன்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியான வயதுவந்தோர் வாக்குரிமையை நம் அரசமைப்புச் சட்டம் (உறுப்பு-326) வழங்கியது ஒரு மாபெரும் புரட்சிகரமான நிகழ்வு. இது நாட்டின் கடைக்கோடி மனிதனையும் ஆட்சிப் பங்கேற்புக்குள் ஆரத்தழுவி அழைத்து வந்தது. இதனால்தான் தேர்தல் நேரத்திலாவது ஒவ்வொரு வாக்காளரும் மகத்தான சக்தியாளராகத் திகழ முடிகிறது.
Diese Geschichte stammt aus der November 29, 2025-Ausgabe von Dinamani Namakkal.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal
Dinamani Namakkal
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Dinamani Namakkal
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: வேதியியல் பயிற்சி மைய நிறுவனர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் செயல்பட்டு வந்த ரேணுகை வேதியியல் பயிற்சி (ஆர்சிசி) மைய நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மடகோன்கர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்
விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
1 min
May 19, 2026
Dinamani Namakkal
லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!
லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
சந்தை மதிப்பில் எச்டிஎஃப்சி வங்கி-ஏர்டெல் 2-ஆவது இடம் இடையே கடும் போட்டி
முதலிடத்தில் ரிலையன்ஸ் ஆதிக்கம்
1 min
May 19, 2026
Dinamani Namakkal
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சர்மா திங்கள் கிழமை தெரிவித்தார்.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
'கிளாண்டர்ஸ்' தொற்று: குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு
'கிளாண்டர்ஸ்' தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

