Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!

Dinamani Namakkal

|

October 01, 2025

அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?

- முனைவர் அ.பிச்சை

மகாத்மா காந்தி 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அதுமுதல் ஓய்வில்லாத தேச ஒற்றுமைப் பணி- தொடர் போராட்டங்கள்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1915-1919) அவரது உடல் மெலிந்தது; நலிந்தது. அப்போது, அவர் வசித்த இடம் சபர்மதி ஆசிரமம்; 1919, அக்டோபர் 2-ஆம் தேதி அவரது 50-ஆவது பிறந்த நாள் வந்தது.

அன்று அவரது உடல் நிலை சரியில்லை. மோசமடைந்து வருகிறார்; தொடர்ந்து இருமுகிறார். உடனே வருமாறு அவரது மகன்களுக்கு தந்திகள் அனுப்பப்படுகின்றன. மகன் தேவதாஸ் வந்து தந்தையை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி எதுவும் பேசவில்லை. ஆசிரமவாசிகளிடம் ஏன் இவ்வளவு பேர் இங்கே வந்தீர்கள்? அவரவர் பணியைச் செய்ய வேண்டாமா? என்றார். எந்நிலையிலும் தன் நலம் கருதாமல், பிறர் துயர் துடைப்பதே இறைப் பணி! இதுதான் அண்ணல் நமக்கு விட்டுச் சென்ற 50-ஆவது பிறந்த நாள் செய்தி!

1931 அக்டோபர் 2-ஆம் நாள். அது மகாத்மா காந்தியின் 62-ஆவது பிறந்த நாள். அப்போது, இரண்டாவது வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக மகாத்மா பிரிட்டன் சென்றிருந்தார். அங்குள்ள காந்திய அன்பர்கள், அவரது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பினர். லண்டன் லைசெஸ்டர் சதுக்கத்தில் உள்ள விக்டரி ஹாலில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தியர்களும் ஐரோப்பியர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

பிறந்த நாள் என்பதற்காக மகாத்மா காந்தி ஓய்வு எடுக்கவில்லை; வழக்கமான பணிகளை மேற்கொண்டார். எப்போதும்போல் வட்ட மேசை மாநாட்டுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். அங்கோ விவாதங்கள் நீடித்தன. மாநாட்டுப் பணிகள் அவரை மிகவும் களைப்பாக்கியிருந்தன. விழா அரங்குக்கு காந்தி வருவதற்கு, காலதாமதம் ஆகிவிட்டது. அது மகாத்மா காந்திக்கு மிகுந்த கவலையைத் தந்தது.

விழா அரங்கில் அவர் அதிகம் பேசவில்லை. பேச்சைத் தொடங்கி அவர் சொன்ன முதல் வாசகம்,

'தவிர்க்க இயலாத காரணத்தால், நான் இங்கே வருவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. காலதாமதத்துக்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்பதாகும். வந்திருந்த விருந்தினர்கள் அதைக்கேட்டு கண்கலங்கி நின்றனர்!

காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மகாத்மா காந்தி கற்பித்த, கடைப்பிடித்த நெறிமுறைகளில் ஒன்றாகும்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா: கோலி அசத்தல் சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர் விராட் கோலி தனது 49-ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Namakkal

தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்

விவசாயிகள் கடும் பாதிப்பு

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

Dinamani Namakkal

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

Dinamani Namakkal

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Namakkal

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size