Versuchen GOLD - Frei
மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது
Dinamani Namakkal
|July 02, 2025
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
-
மதுரை, ஜூலை 1: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'ஒரு மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினர் விசாரணையின் போது நடத்திய தாக்குதலில் அஜித்குமார் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அஜித்குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ராஜராஜன், மாரீஸ்குமார், அருண் சுவாமிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அமர்வு முன் திங்கள்கிழமை முறையீடு செய்தனர். மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி யளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் ஹென்றி திபேன் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் விசாரணையின் போது முன்னிலையான வழக்குரைஞர்கள், காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தடிமனான நெகிழிக் குழாய்கள், இரும்புக் கம்பிகளால் தாக்கினர் எனத் தெரிவித்து, புகைப்படங்களையும், விடியோவையும் தாக்கல் செய்தனர். பின்னர், வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதம்: காவலாளியைத் தாக்கிய போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்தார். காயமடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில், விசாரணையை அங்கிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும். அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது ஏன்? இது சந்தேகத்தை எழுப்புகிறது.
Diese Geschichte stammt aus der July 02, 2025-Ausgabe von Dinamani Namakkal.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal
Dinamani Namakkal
சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்த பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான பார்சிலோனா எஃப்சி, இந்த சீசனில் வெற்றிக் கோப்பையை திங்கள்கிழமை தக்கவைத்தது.
1 min
May 12, 2026
Dinamani Namakkal
புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு
5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்
1 mins
May 12, 2026
Dinamani Namakkal
விஜய் சந்திப்பு: வைகோ நெகிழ்ச்சி
முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது நெகிழ்ச்சியாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
1 min
May 12, 2026
Dinamani Namakkal
ஈரான் போர் அமைதிப் பேச்சில் மந்தநிலை பங்குச்சந்தையில் வீழ்ச்சியுடன் வார வர்த்தகம் தொடக்கம்
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை வீழ்ச்சியுடன் தொடங்கியது.
1 min
May 12, 2026
Dinamani Namakkal
ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்: விவரம் சேகரிக்கும் கல்வித் துறை
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.
1 min
May 12, 2026
Dinamani Namakkal
வெள்ளை மாளிகையில் வேத மந்திரங்கள் முழக்கம்!
அமெரிக்காவின் தேசிய பிரார்த்தனை தினத்தை முன் னிட்டு, வெள்ளை மாளிகையில் நடை பெற்ற சிறப்புப் பிரார்த்தனை நிகழ்வில் வேத மந்திரங்கள் முழங்கின.
1 min
May 12, 2026
Dinamani Namakkal
பிலிப்பின்ஸ் துணை அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றம்
பிலிப்பின்ஸ் நாட்டின் துணை அதிபர் சாரா துதெர்தேவிற்கு (படம்) எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
1 min
May 12, 2026
Dinamani Namakkal
இந்தியாவுக்கு ரூ.476 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது மாலத்தீவு
இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.
1 min
May 12, 2026
Dinamani Namakkal
22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்
நாட்டில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Namakkal
திமுக உறவை காங்கிரஸ் முறித்தது சரியானதல்ல: டி.ராஜா
தமிழகத்தில் தவெகவுக்கு ஆதரவளிப்பதற்காக திமுகவுடனான உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டது சரியானதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா கூறினார்.
1 min
May 12, 2026
Translate
Change font size
