Facebook Pixel இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..! | Dinamani Namakkal – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!

Dinamani Namakkal

|

May 15, 2025

இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.

- வேணு ராஜாமணி

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் தெளிவான மற்றும் உறுதியான மாற்றத்தை பிரதமர் மோடி முன்வைத்தார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ஆயுதப்படைகள் அண்மையில் நடத்திய துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடுமையான செய்தி தரப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை அவர் தெளித்தெளிவாக எடுத்துரைத்தார்.

இனி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' புதிய அணுகுமுறையையும், கொள்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை விளக்கிய அவர், அந்தக் கொள்கையின் மூன்று முக்கியக் கூறுகளை எடுத்துரைத்தார்.

இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குத் தகுந்த பதிலடி அளிக்கப்படும்; பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கிருந்து முளைத்தாலும், அந்த இடங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது முதல் கூறாகும்.

எந்தவொரு அணு ஆயுத மிரட்டலையும் இந்தியா சகித்துக்கொள்ளாது; அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற போர்வையின் கீழ் உருவாகும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது இந்தியா துல்லியமாகவும், தீர்க்கமாகவும் தாக்குதல் நடத்தும் என்பது இரண்டாவது கூறாகும்.

அரசின் நிதியுதவியைப் பெறும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களையும் வெவ்வேறாக இந்தியா வித்தியாசப்படுத்தி பார்க்காது என்பது மூன்றாவது கூறாகும். அதாவது, பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை யான ஐ.எஸ்.ஐ., அரசு ஆகியவை ஒரே கண்ணோட்டத்தில்தான் இனிமேல் பார்க்கப்படும் என்பதுதான் பிரதமர் அளித்திருக்கும் செய்தி (எச்சரிக்கை).

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரு சேர நடைபெற முடியாது', 'ரத்தமும் தண்ணீரும் சேர்ந்து பாயமுடியாது' என்றார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

உலக அமைதிக்கு வழிவகுக்கும் யோகா

யோகா என்பது தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமல்ல, உலக அமைதிக்கு வழிவகுக்கும் உந்துசக்தியாகவும் பயன்படக் கூடியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

June 22, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

உள்ளகப் பயிற்சி கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள்!

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Namakkal

தனியார் ஆலையில் அமோனியா வாயுக் கசிவு: 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு காரணமாக வடமாநில பெண் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்; 62 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,790 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,253 கன அடியாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,790 கன அடியாக குறைந்தது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Namakkal

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

அமோனியா வாயுக் கசிவால் உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 22, 2026

Translate

Share

-
+

Change font size