தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்ட அபுபக்கர் சித்திக்: இளைஞர்களை மூளைச்சலவை செய்தது அம்பலம்
Dinamani Madurai
|July 13, 2025
தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
-
சென்னை, ஜூலை 12:
கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் கடந்த 30 ஆண்டுகளாகவும், ஏழு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் என்பவர் 26 ஆண்டுகளாகவும் தலைமறைவாக இருந்தனர்.
அவர்கள் இருவரையும் தமிழக காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் படையினர் ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் வைத்து கைது செய்தனர். தற்போது இருவரையும் போலீஸார் 6 நாள்கள் தங்களது காவலில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்கின்றனர்.
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம்: அபுபக்கர் சித்திக் தன்னிடம் பழகிய மும்பையைச் சேர்ந்த வியாபாரி மூலம் அன்னமய்யா பகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். இதற்காக தனது அடையாளங்கள் அனைத்தையும் முழுமையாக மாற்றியுள்ளார்.
தனது பெயரை அமானுல்லா என மாற்றி போலியான ஆவணங்கள் மூலம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். அங்கு ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்டு, பல லட்சங்களை லாபமாக அபுபக்கர் சித்திக் ஈட்டியுள்ளார். இருப்பினும் அங்கிருந்தபடி தமிழகத்தில் கோவை, சென்னை, வேலூர், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்.
மறைவிடம் ரகசியம்: காவல் துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி இமாம் அலியிடம் இருந்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிப்பது குறித்து அபுபக்கர் சித்திக் நுட்பமாக கற்றுத் தெரிந்து கொண்டுள்ளார். அதன்மூலம் கோவை, மதுரை, திருச்சி, மதுரை, நாகூர் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டுகளை வைத்தார்.
Diese Geschichte stammt aus der July 13, 2025-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Madurai
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Madurai
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Madurai
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Madurai
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Madurai
வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்
பிசிசிஐ உத்தரவு எதிரொலி
1 min
January 04, 2026
Dinamani Madurai
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Madurai
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Madurai
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Madurai
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Translate
Change font size
