Versuchen GOLD - Frei
கற்கை நன்றே கற்கை நன்றே
Dinamani Madurai
|June 27, 2025
பள்ளிக் கல்வித் துறையின் பெரும்பாலான நல்ல முன்னெடுப்புகள் தேசிய கல்விக் கொள்கையோடு ஒத்திருக்கின்றன. மாறுபாடு கொள்ளும் இடம், மொழிக் கொள்கையில்தான். இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்பதுதான் பிணக்குக்கான காரணமாக இருக்கிறது.
கல்வி தனி மனிதனின் வாழ்வையும் சமுதாயத்தின் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் சக்திவாய்ந்த கருவி. மனிதர்களை அறியாமையிலிருந்து விடுவித்து, அறிவொளியை நோக்கி இட்டுச் செல்லும் சாதனம். 'கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால் மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம்' என்று குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் பாடுகிறார்.
கல்வியினால்தான் சமுதாயத்தில் நிலவும் அறியாமை, மூடநம்பிக்கைகள், பாகுபாடுகளை நீக்கி, நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும். சமத்துவ சமுதாயம் சாத்தியமாகும். கல்வியில் சிறந்தவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் மேம்பாடு போன்றவற்றால் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள்.
இத்தகைய கல்வியைக் குழந்தைப் பருவம் முதலாகத் தொடங்கிக் கற்கவேண்டும். அதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசும் இதற்கான கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்களையும் அதற்கான நிதியைப் பெற்றுக்கொண்டு மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உறுதிசெய்ய 2009-ஆம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் மாறிவரும் உலகின் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியை வழங்கவும் தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டுவரப்பட்டுள்ளது.
சமக்ர சிக்ஷா திட்டம் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் பள்ளிக்கல்வியை முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம். பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சமமான மற்றும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது.
கல்வியை அணுகுவதில் புதிய முறைகளை ஏற்படுத்துதல், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள்); குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்தல் மற்றும் இடைநிற்றலைக் குறைத்தல்; பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்புப் பயிற்சிகள் அளித்தல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
Diese Geschichte stammt aus der June 27, 2025-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
January 06, 2026
Dinamani Madurai
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Madurai
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Madurai
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Dinamani Madurai
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Madurai
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Madurai
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Madurai
பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
January 05, 2026
Dinamani Madurai
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Madurai
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Translate
Change font size
