Versuchen GOLD - Frei

புதிய திட்டமும் பழைய திட்டமும்...

Dinamani Karur

|

January 03, 2026

மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

- உதயை மு. வீரையன்

அனைத்தும் மக்களைச் சென்று சேர்வது இல்லை. போகிற வழியிலேயே கரைந்து திசைமாறிப் போகின்றன. ஒரு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி வேறு திட்டங்களுக்குத் திருப்பி விடப்படுகின்றன. திட்டங்கள் வெறும் திட்டங்களாக இருக்கின்றனவே தவிர, செயல்பாட்டுக்கு வருவது இல்லை. இப்படி ஒரு திட்டம் போடப்பட்டதே மக்களுக்குத் தெரிவதும் இல்லை.ஆனால், நூறு நாள் வேலைத் திட்டம் கிராம மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்தது. செயல்படுத்தப்படும்போது குறைபாடுகளும், ஊழல்களும் இருந்தது என்பது உண்மைதான். அதையும் மீறி கிராமப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு நூறு நாள்களுக்கு வேலை உறுதி இருந்தது. என்பதை மறுக்க முடியாது.

இப்போது அந்தத் திட்டத்துக்கு மாற்றாக, 'வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபிஜி ராம்-ஜி) என்ற புதிய திட்டம் கடந்த 2025 டிசம்பர் 16 -ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைய திட்டத்துக்கு முழு நிதியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இனி மத்திய அரசும், மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் நிதியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2005-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில், 'தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்' என்று அழைக்கப்பட்டு, பிறகு 2009-இல் மகாத்மா காந்தி பிறந்த நாளில், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் 2008-09ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு ஓராண்டுக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பின் மூலம் பொது சொத்துகள் உருவாக்கப்படுகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துகள் அனைத்தும் கைப்பேசி செயலி மூலம் பணியின் விவரங்களைக் புவியிடக் குறியீடுகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Karur

Dinamani Karur

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Karur

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size