Versuchen GOLD - Frei
கூட்டுறவும் நாட்டுயர்வும்!
Dinamani Kanyakumari
|August 04, 2025
இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு கணிசமானது மட்டுமல்ல, தவிர்க்க முடியாததும்கூட.
-
2002-இல் அறிவிக்கப்பட்ட கூட்டுறவுக் கொள்கைக்குப் பிறகு, அந்தத் துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மாறிவிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான், 20 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து தேசிய கூட்டுறவுக் கொள்கை 2025-ஐ மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருக்கிறது.
1904-இல் அன்றைய காலனிய ஆட்சியில் முதல்முறையாக கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று குடியரசானதைத் தொடர்ந்து, தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும் என்று அப்போதைய ஜவாஹர்லால் நேரு அரசு அறிவித்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க முற்பட்டது.
சர்தார் வல்லபபாய் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரின் நண்பரும், காந்தியவாதியுமான திரிபுவன்தாஸ் படேல் என்பவர் தான், இந்தியாவின் கூட்டுறவுச் சங்க முயற்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். 1946-இல் அன்றைய பம்பாய் மாகாணத்தின் குஜராத்தி பேசும் பகுதிகளில், கிராமம் கிராமமாக நடந்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுச் சங்கங்களை ஒவ்வொரு பகுதியிலும் அமைக்க முற்பட்டார் திரிபுவன்தாஸ் படேல். அதன் விளைவாக உருவானதுதான் 'கேரா' பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
1950 வரை நமது தேவைக்குப் பால் பவுடரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த இந்தியாவின் 'அமுல்' நிறுவனம், இன்று சர்வதேசச் சந்தையில் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்ததற்கு, கூட்டுறவுச் சங்க வழிமுறைதான் காரணம்.
Diese Geschichte stammt aus der August 04, 2025-Ausgabe von Dinamani Kanyakumari.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்
நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்
புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Kanyakumari
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size