Versuchen GOLD - Frei
கற்கை நன்றே கற்கை நன்றே
Dinamani Kanyakumari
|June 27, 2025
பள்ளிக் கல்வித் துறையின் பெரும்பாலான நல்ல முன்னெடுப்புகள் தேசிய கல்விக் கொள்கையோடு ஒத்திருக்கின்றன. மாறுபாடு கொள்ளும் இடம், மொழிக் கொள்கையில்தான். இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்பதுதான் பிணக்குக்கான காரணமாக இருக்கிறது.
கல்வி தனி மனிதனின் வாழ்வையும் சமுதாயத்தின் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் சக்திவாய்ந்த கருவி. மனிதர்களை அறியாமையிலிருந்து விடுவித்து, அறிவொளியை நோக்கி இட்டுச் செல்லும் சாதனம். 'கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால் மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம்' என்று குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் பாடுகிறார். கல்வியினால்தான் சமுதாயத்தில் நிலவும் அறியாமை, மூடநம்பிக்கைகள், பாகுபாடுகளை நீக்கி, நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும். சமத்துவ சமுதாயம் சாத்தியமாகும். கல்வியில் சிறந்தவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் மேம்பாடு போன்றவற்றால் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள்.
இத்தகைய கல்வியைக் குழந்தைப் பருவம் முதலாகத் தொடங்கிக் கற்கவேண்டும். அதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசும் இதற்கான கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்களையும் அதற்கான நிதியைப் பெற்றுக்கொண்டு மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உறுதிசெய்ய 2009-ஆம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் மாறிவரும் உலகின் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியை வழங்கவும் தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டுவரப்பட்டுள்ளது.
சமக்ர சிக்ஷா திட்டம் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டம் பள்ளிக் கல்வியை முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம். பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சமமான மற்றும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது.
கல்வியை அணுகுவதில் புதிய முறைகளை ஏற்படுத்துதல், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள்); குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்தல் மற்றும் இடைநிற்றலைக் குறைத்தல்; பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்புப் பயிற்சிகள் அளித்தல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
Diese Geschichte stammt aus der June 27, 2025-Ausgabe von Dinamani Kanyakumari.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
3 mins
November 03, 2025
Dinamani Kanyakumari
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Kanyakumari
வாரிசுகளின் கடமை
அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
2 mins
November 03, 2025
Dinamani Kanyakumari
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Kanyakumari
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Kanyakumari
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Kanyakumari
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Kanyakumari
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Kanyakumari
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Kanyakumari
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Translate
Change font size
