Versuchen GOLD - Frei
ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Dinamani Erode & Ooty
|April 30, 2025
ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சார்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
-
புது தில்லி, ஏப். 29:
மேலும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அல்லது நிர்வாகம்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இணையத்தில் ஆபாச புகைப்படங்கள், காட்சிகளைப் பதிவிடுவதைத் தடுக்க தனியொரு ஆணையத்தை உருவாக்கி விதிகளை வகுக்கக் கோரி 5 மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சமுதாயத்துக்குப் பாதிப்பு? அந்த மனுவில், 'சமூக வலைதளங்களில் எவ்வித வரம்புமின்றி ஆபாச பதிவுகளை வெளியிட தனியே பக்கங்கள் மற்றும் பயனாளர்கள் உள்ளனர். அதேபோல் குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையிலான புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை ஓடிடி வலைதளங்களும் வெளியிட்டு வருகின்றன.
இதுபோன்ற பதிவுகளால் குழந்தைகள், இளைஞர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் மனநிலையையும் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றங்களும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இணையத்தில் பகிரப்படும் ஆபாச பதிவுகளைத் தடுக்கத் தவறினால் சமுதாய மதிப்புகள், இளைஞர் மனநலன் மற்றும் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும்.
Diese Geschichte stammt aus der April 30, 2025-Ausgabe von Dinamani Erode & Ooty.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Erode & Ooty
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Erode & Ooty
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.
1 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Erode & Ooty
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Erode & Ooty
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Translate
Change font size
