Versuchen GOLD - Frei
தரவுகள் பேசட்டுமே...
Dinamani Dindigul & Theni
|July 10, 2025
கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அர்த்தமில்லை. நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலக நடைமுறைகளின் படி அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.
தமிழ்மொழியும் அதைப் பேசும் மக்களும் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் நம்மை வாழ்வித்து வருவதோடு உலகின் மிக மூத்த மொழிகளுள் ஒன்றென நிற்கிறது. இதனால் தான், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்று பெருமிதம் கொள்கிறோம்.
இலக்கியங்கள் மொழியின் தொன்மையைச் சொல்கின்றன. அம்மொழி பேசும் மக்களின் நாகரிகத்தை நிறுவுவதற்கு கற்பனை கலந்த இலக்கியம் மட்டுமே சான்றாகாது. பிற சான்றுகள் தேவைப்படுகின்றன. அதற்கு அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன.
அகழாய்வு என்பது அறிவியல் அணுகுமுறை கொண்டது. உலகம் முழுவதும் அகழாய்வை ஒப்புக்கொள்வதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பல வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் அறிஞர்களும், மானுடவியல் ஆராய்ச்சியாளர்களும் தொன்மையான மனித வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அகழாய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவைப் பொருத்தவரை, உலகின் முதல் நூல் என்று சொல்லப்படும் ரிக் வேதம் நம்முடையது. அது 1028 சூக்தங்களில் 10,600 ஸ்லோகங்களைக் கொண்டது. அதிலே பொற்காசுகள், பொன்னாலான ஆபரணங்கள், தங்கம் கிடைத்த இடங்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. நிர்வாகக் கட்டமைப்பை உறுதி செய்யும் அமைப்புகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வானியல் பற்றிய அறிவியல் இருக்கிறது. ரிக் வேத காலத்தை ஆராய்ந்த ஜெர்மனி அறிஞர் ஜாகோபி கி.மு. 6000 என்று முடிவுக்கு வந்தார்.
உலக நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகள், அயல்நாட்டுத் தூதுவர்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. திரைகடல் வணிகம் பற்றிய தகவல்கள், வானியல் குறிப்புகள் இருக்கின்றன. நிர்வாகம், கலைகள், ஆயுதங்கள், அணு முதல் உளவியல் வரையிலான இன்றைய உலகம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் அறிவியலைத் தொல்காப்பியம் என்ற ஒற்றை நூலே பேசிவிடுகிறது. இத்தகைய இலக்கிய வளம் நமது தொன்மையைச் சொல்ல ஏற்கெனவே இருக்கிறது.
Diese Geschichte stammt aus der July 10, 2025-Ausgabe von Dinamani Dindigul & Theni.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Translate
Change font size

