கூட்டணி ஆட்சியா? கூட்டணி அரசா?
Dinamani Dharmapuri
|July 09, 2025
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
பி.ஜெபலின் ஜான் சென்னை, ஜூலை 8: அதிமுகவின் மௌனமும் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடும் இந்த விவாதத்தைத் தொடர்ந்து பேசுபொருளாக்கி இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் முறிந்த அதிமுக-பாஜக கூட்டணி, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அமித் ஷா தனது 'எக்ஸ்' பக்கத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனப் பதிவிட்டார். ஆட்சி அமையும் என்று சொன்னாரே தவிர, அரசு அமையும் என்று சொல்லவில்லை. அதற்குள், அமித் ஷா 'கூட்டணி ஆட்சி' என்று அறிவித்துவிட்டார் என்று ஊடகங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு வந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய பிறகு அவருடன் சேர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
அடுத்த நாளே, அமித் ஷா கூறியது 'கூட்டணி ஆட்சிதான்', 'கூட்டணி அரசு அல்ல' என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். 2021-வரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அதிமுக அரசும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருந்தது என்பதையும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில்தான் அமித் ஷா சில நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனத் தெரிவித்து, ஓயாத கூட்டணி ஆட்சி சர்ச்சைக்கு உயிர் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் இப்போதும் எடப்பாடி பழனிசாமியோ அவரது தரப்போ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாஜகவிலும் அதே நிலைதான்.
Diese Geschichte stammt aus der July 09, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ
அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Dharmapuri
கட்சி நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஜனவரி 5-க்குள் அரசிதழில் வெளியிட உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Translate
Change font size

