Facebook Pixel அறிவறிந்த மக்கட்பேறு | Dinamani Dharmapuri – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

அறிவறிந்த மக்கட்பேறு

Dinamani Dharmapuri

|

June 03, 2025

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார்.

- முனைவர் அருணன் கபிலன்

உலகத்தில் பல்லுயிரும் இன்புற்று வாழ்வதற்கு இயற்கை வகை செய்து தந்திருக்கிறது. ஆதலால் அவை தத்தம் இயல்புகளோடு இயற்கைக்கு முரணாகாத வண்ணம் வாழ்க்கையை நிறைவு செய்கின்றன. இறப்புக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் எல்லா உயிரும் தனக்கான மரபு வழியைத் தொடர்கின்றன. ஏனைய உயிர்களின் மரபுத் தொடர்ச்சிக்கு இனப்பெருக்கம் என்று பெயர். அதாவது, தன்னுடைய இனத்தைப் பெருக்கிக் கொள்வது என்று அதற்குப் பொருள். ஆனால், மனிதன் மேற்கொள்கிற மரபுத் தொடர்ச்சிக்குப் பேறு என்று பெயர். இதனை 'மக்கட்பேறு' என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறுகிறார்.

பெறுதல் என்பதும் பெருக்குதல் என்பதும் இயல்பாகத் தன் முயற்சியால் தோன்றக் கூடிய ஏனைய உயிர்ச்செயலின் விளைவு. ஆனால், பேறு என்பது அவ்வாறன்று. மானுட முயற்சியோடு இயற்கையின் அதற்கு மேலான ஆற்றலின் வெளிப்பாடாகப் பெறப்படுவதே பேறு.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பேறுகள் பலவுண்டு. அவற்றைத் தொகுத்துப் பதினாறு என்று வகைப்படுத்துகிற தமிழ் மரபு மக்கட்பேற்றினை நடுவில் நிறுத்துகிறது. ஆனால், திருவள்ளுவர் மற்ற பேறுகளை விடவும் முதன்மையானது மக்கட்பேறு என்று குறிப்பிடுவதுடன், அந்தப் பேற்றினை 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று பண்புசுட்டி முன்னிலைப்படுத்துகிறார். அதிலும் 'அறிவறியும் மக்கட்பேறு' என்று குறிப்பிடாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார். தோன்றின் புகழொடு தோன்றுதலைத் தானே தன் திருக்குறளில் மக்கட்பேற்றின் சிறப்பினை உணர்த்துவதற்கு வள்ளுவர் பயன்கொண்டிருக்கிறார்.

ஏனெனில், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தும் எல்லாருக்கும் மக்கட்பேறு எளிமையாக வாய்த்து விடுகிறது. ஆனால், 'அறிவறிந்த மக்கட்பேறு' என்பது அத்தனை எளிதாகக் கிடைத்து விடுகிற பேறு இல்லை என்பது அவர்தம் கருத்து. இது சங்க காலத்திலிருந்தே தொடர்ந்திருக்கிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியாவின் எரிசக்தி தேவை அதிகரிப்பால் சர்வதேச சந்தைகளில் மாற்றம் ஏற்படும்

ரஷியா கணிப்பு

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் காலமானார்

தேசிய விருது வென்ற பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் (56) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

கேரளம்: 'ஷிகெல்லா' தொற்றால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

மாற்றமே வெற்றிக்கான பயணம் !

நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

மேட்டூரிலிருந்து ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை

ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு?

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

time to read

1 min

June 08, 2026

Translate

Share

-
+

Change font size