மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது
Dinamani Cuddalore
|July 02, 2025
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
-
மதுரை, ஜூலை 1: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'ஒரு மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினர் விசாரணையின் போது நடத்திய தாக்குதலில் அஜித்குமார் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அஜித்குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ராஜராஜன், மாரீஸ்குமார், அருண் சுவாமிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அமர்வு முன் திங்கள்கிழமை முறையீடு செய்தனர். மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி யளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் ஹென்றி திபேன் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் விசாரணையின் போது முன்னிலையான வழக்குரைஞர்கள், காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தடிமனான நெகிழிக் குழாய்கள், இரும்புக் கம்பிகளால் தாக்கினர் எனத் தெரிவித்து, புகைப்படங்களையும், விடியோவையும் தாக்கல் செய்தனர். பின்னர், வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதம்: காவலாளியைத் தாக்கிய போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்தார். காயமடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில், விசாரணையை அங்கிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும். அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது ஏன்? இது சந்தேகத்தை எழுப்புகிறது.
Diese Geschichte stammt aus der July 02, 2025-Ausgabe von Dinamani Cuddalore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Cuddalore
Dinamani Cuddalore
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு
பாமகவில் விருப்ப மனு பெறும் கால அவகாசம் டிச.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
கரூர் சம்பவம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆய்வு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை கரூருக்கு வந்து ஆய்வு செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது
தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
1 mins
December 20, 2025
Translate
Change font size

