Versuchen GOLD - Frei
கண்ணியக் காவலர் கக்கன்ஜி!
Dinamani Cuddalore
|June 18, 2025
மதுரை அரசு மருத்துவமனையில் கக்கன்ஜி சிகிச்சை பெற்றபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவரைச் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். "என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது, "உங்கள் அன்பு மட்டும் போதும்" என்றார் கக்கன்ஜி.
வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்ட, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டின் மதுரை மேலூரை ஒட்டிய சிற்றூர் தும்பைப்பட்டியைத் தனது பிறப்பால் தூய்மைப்பட்டி ஆக்கியவர் கக்கன்ஜி. 1909-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாளில் சிதைந்த மண்சுவர், செல்லரித்த கூரை வீட்டில், பூசாரி கக்கனுக்கும் தாய் குப்பிக்கும் பிறந்த குழந்தை; படிப்பு கைவிட்டாலும், உழைப்பால் உயர்ந்து, விடுதலைப் போராட்டக் களத்துத் தளபதியாக, சிறைத் தண்டனையும் கசையடியும் பெற்று, மக்களவை உறுப்பினராக, தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சராகத் தொண்டாற்றிய அந்தத் தூயவர். கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்து ஐந்து மகன்களும் ஒரு மகளும் அவருக்கு வாரிசாக வாய்த்தனர்.
வாழ்வில் திருப்பம் - காங்கிரஸ் கட்சிப் பணிகளில் விருப்பம்; தம் வாழ்வின் முன்னோடியாக வரித்துக்கொண்ட தியாகி மதுரை வைத்தியநாத ஐயர் முன்னிலையில் கக்கன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனார். காந்திய வழியில் பொதுத் தொண்டு புரிய விழைந்தார். 1939-ஆம் ஆண்டில் முனைப்பாகச் செயல்பட்டார்.
விடுதலைப் போராட்டம் தீவிரமான போது 'வந்தே மாதரம்' என்று அச்சிட்ட துண்டு அறிக்கைகளை மக்களிடையே வழங்கினார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவரைக் கைது செய்து 15 நாள்கள் சிறைத்தண்டனை விதித்தனர். விடுதலை ஆனதும் கக்கன் முன்னிலும் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினார். புதிய இளைஞர்களைக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்தார். இதைக் கேள்விப்பட்ட அண்ணல் காந்தி, கக்கனைத் தனிநபர் சத்தியாகிரகப் போரின் தலைமைத் தளபதியாக நியமித்தார். இதை அறிந்த அரசு அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை விதித்தது.
கசையடியும், சிறைக் கொடுமையும் அனுபவித்து வெளியே வந்த மறுநாளே, கக்கனுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பைத் தலைமை வழங்கியது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தால் நாடெங்கும் கலவரம் மூண்டது. காங்கிரஸ் இயக்கத்தை வெள்ளையர் ஆட்சி தடை செய்தது. ஆனால், தம் நண்பர்கள் பழனிசாமி, ராமசாமி ஆகியோருடன் கக்கன் தலைமறைவானார்.
Diese Geschichte stammt aus der June 18, 2025-Ausgabe von Dinamani Cuddalore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Cuddalore
Dinamani Cuddalore
WPL மும்பையை வீழ்த்தியது டில்லி
டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.
1 min
January 21, 2026
Dinamani Cuddalore
பேரவையிலிருந்து ஆளுநர் மீண்டும் வெளியேறினார்
13 குற்றச்சாட்டுகளுடன் ஆளுநர் மாளிகை விளக்கம்
1 min
January 21, 2026
Dinamani Cuddalore
ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
January 21, 2026
Dinamani Cuddalore
கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்
லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min
January 21, 2026
Dinamani Cuddalore
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.
1 min
January 20, 2026
Dinamani Cuddalore
சமூக ஒற்றுமையின் விதைகள்!
இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குப் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
2 mins
January 20, 2026
Dinamani Cuddalore
இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர். என். ரவி உரையுடன் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 min
January 20, 2026
Dinamani Cuddalore
ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்கு: அமைச்சர் உள்பட 4 பேர் விடுவிப்பு
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக் கிலிருந்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
1 min
January 20, 2026
Dinamani Cuddalore
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.1,07,600
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
January 20, 2026
Dinamani Cuddalore
இடைநிலை ஆசிரியர்கள் சிலம்பு ஏந்தி போராட்டம்
ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 25-ஆவது நாளாக திங்கள்கிழமை சிலம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 20, 2026
Translate
Change font size

