Versuchen GOLD - Frei
தேசியமும் தர்மமும் காக்க...
Dinamani Coimbatore
|January 07, 2026
மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.
அந்நியரின் ஆதிக்கத்தைக் கண்டு பாரதி கொதித்துப் போனார், அவர்களை நம் நாட்டிலிருந்து விரட்ட நினைத்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அவருடைய லட்சியம் அதுவல்ல. உலகத்தின் கண்முன் நம் நாட்டின் மதிப்பை உயர்த்துவதும், ஆணும் பெண்ணும் அனைவருமான ஒரு புதுவகை மனிதர்களால் ஆன ஒரு நாட்டை அவர் கட்டியெழுப்ப நினைத்ததும்தான்' என்று எழுதினார்.தனிப் பெரும் ஆளுமையான மகாகவி பாரதி தமிழர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். பாமரர்களும் அறிந்த பண்டிதர். தேசத்தின் மீது அவருக்கு இருந்த பக்தியும், இந்த மண்ணில் பின்பற்றப்பட்ட தர்மத்தின் மீதான பற்றுதலும் அவரது அடையாளமாக இருக்கின்றன.
பாரதியின் கவிதைகள், இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. தேசபக்திப் பாடல்கள், தெய்விகமும் வேதாந்தமும் போற்றும் பாடல்கள், தேசபக்திப் பாடல்களுக்குள் அறமும், தெய்விகத்துக்குள் தேச சிந்தனையும்கூட இழையோடியிருக்கும். 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' இது எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண் என்று உரிமை கொண்டாடும் போதே, 'துங்கம் உயர்ந்து வளர் கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே' என்பார்.
இதை 'வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ?' என்று நமது அடையாளம் ஆன்மிகமும் வேதங்களும் என்பதில் பாரதி மாறுபட்டதே இல்லை.
தமிழ், தேச விடுதலை, பெண் விடுதலை, சமூகநீதி என்று சமூகத்தைச் சீரமைக்க முயன்றவர் பாரதி.
புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதைவிட நமது பெருமைமிகு வரலாற்றை மீண்டும் நனவாக்க வேண்டும் என்ற விருப்பமே அவருக்கு நிறைந்திருந்தது. அதை ‘புதுமைப்பெண்' கவிதையில் குறிப்பிடுகிறார்.
பேராற்றல் கொண்ட பெண்கள் உலகையே வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த வல்லவர்கள் என்று சொல்ல வந்தவர். அப்போதும், இந்த தர்மத்தின் மீதான பற்றினை,
'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்' என்கிறார்.
புதுமைப் பெண்கள் மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம் என்றவர், அப்படித்தான் என் தேசத்தின் பெண்கள் சிறப்பாக வேதங்கள் விளங்கிய நாளில் வாழ்ந்தார்கள் என்றும் நினைவூட்டுகிறார்.
Diese Geschichte stammt aus der January 07, 2026-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
2 mins
January 09, 2026
Dinamani Coimbatore
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
அரசுப் பணி முறைகேடு வழக்கு தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவை வழங்கி முறைகேடு செய்த வழக்கு தொடர்பாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற் கொண்டனர்.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு
வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Coimbatore
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Coimbatore
தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்
இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
2 mins
January 09, 2026
Dinamani Coimbatore
காலமானார் காந்தியவாதி மா.வன்னிக்கோன்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும், காந்தியவாதியுமான மா.
1 min
January 09, 2026
Listen
Translate
Change font size
