The Perfect Holiday Gift Gift Now

ரஷியா - உக்ரைன் போர்: என்னதான் தீர்வு?

Dinamani Coimbatore

|

June 10, 2025

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது ரஷியா. இந்த நிலையில்தான் போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் கடந்த மே 15-ஆம் தேதியன்று நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

- முனைவர் வைகைச்செல்வன்

மெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷியா 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. மூன்று ஆண்டு காலமாக இடைவிடாத தாக்குதலை உக்ரைன் தாக்குப் பிடித்து வருகிறது. ஒரு வாரப் போரையே உக்ரைன் தாக்குப் பிடிக்க முடியாது என்று ரஷியா தப்புக் கணக்கு போட்டு விட்டது.

ஆனால், நிலைமை வேறு மாறாகி விட்டது. அதன்பிறகு எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது ரஷியா. இந்த நிலையில் தான் போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் கடந்த மே 15-ஆம் தேதியன்று நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

2022-இல் உக்ரைன்தான் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது; ரஷியா அல்ல. ஆகவே எந்த முன் நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரஷியா முனைந்தது.

ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் உக்ரைன் பேச்சுவார்த்தை குழு தலைவரின் முயற்சியால் ஒரு கூட்டு வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தலின்பேரில், அது குப்பையில் வீசப்பட்டது என்பதை பதிவு செய்தே ஆக வேண்டும். இருந்தபோதிலும் ரஷியா பலமுறை போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ரஷியா- உக்ரைன் போர் நிறுத்தம் எப்போது? அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்களே! அவர்களின் துயரத்துக்கு ஆறுதலும், தேறுதலும் எப்போது கிடைக்கும் என்பதற்கான விடை கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கிடைக்கவில்லை. ஆகவேதான் 'எங்களின் போர் நிறுத்த திட்டங்கள் எதற்கும் உக்ரைன் அதிகாரிகள் செவி மடுக்கவில்லை' என்று ரஷியா கனத்த இதயத்தோடு மீண்டும் சொன்னது. இதற்கு ஒரு உதாரணமாக இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 3 நாள்களில் 5 முறை ரஷிய எல்லையைத் தாக்க முயற்சிகள் மேற்கொண்டது உக்ரைன் என்பதை தெரிவித்தே ஆக வேண்டும்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore

Dinamani Coimbatore

2026-ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு மறுமலர்ச்சி தருமா கேரளம்?

கடந்த ஆண்டு பிகார் மற்றும் தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்களில் மோசமான தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு 2026-ஆம் ஆண்டில் கேரளம் மறுமலர்ச்சியைத் தருமா?

time to read

1 mins

January 03, 2026

Dinamani Coimbatore

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

January 03, 2026

Dinamani Coimbatore

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

3 mins

January 03, 2026

Dinamani Coimbatore

புத்தாண்டு சபதங்கள்!

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.

time to read

2 mins

January 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பதினாறு பேறு தரும் பரமன்

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Coimbatore

இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Coimbatore

தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 02, 2026

Dinamani Coimbatore

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

January 01, 2026

Translate

Share

-
+

Change font size