Versuchen GOLD - Frei

மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்

DINACHEITHI - NAGAI

|

January 03, 2026

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

"மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம். என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

மு.க. ஸ்டாலின் நேற்று (02-01-2026) திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு :-

இது மாதிரியான பயணங்களால் என்ன பயன் என்று சிலர் கேட்கலாம்? காந்தியின் நடைப்பயணமும் - மாவோ-வின் நீண்ட பயணமும் வரலாற்றில் புரட்சி ஏற்படுத்தியிருப்பது போன்று, அந்தத் தாக்கத்தை அவர்கள் உணர வேண்டும். இப்படியான, நடைப்பயணங்கள்தான், தலைவர்கள் மக்களிடம் சென்று எளிய வகையில் - சுலபமான முறையில் நேரடியாக தங்களுடைய கருத்துகளைச் சொல்ல முடியும் ! அந்த நடைப்பயணத்தின் தேவை குறித்தும் - அதிலுள்ள நியாயங்கள் குறித்தும் மக்கள் பேசத் தொடங்குவார்கள். மக்கள் பேச பேசதான், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

திராவிட இயக்க மேடைகளிலும் நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டுக்காக - தமிழர்களுக்காக - அவர்களின் உரிமைகளுக்காக கர்ஜித்த அண்ணன் வைகோ அவர்கள், முதுமையை முற்றிலுமாகத் தூக்கி எறிந்துவிட்டு இந்த நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை நாம் நிச்சயம் ஒழிக்க வேண்டும். அதில் எந்தக் கருத்து மாறுபாடும் - வேறுபாடும் கிடையாது. போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு இருக்கிறது. அதன் மூலமாக, முழுமையாக அல்ல; ஓரளவிற்கு பலனும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ரொம்ப முக்கியமானது, அந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அதன் பாதிப்புகளை உணர்ந்து, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும். அவர்களுடன் இருப்பவர்கள், அவர்களைத் திருத்த வேண்டும்.

போதைப் பொருட்களின் புழக்கம் என்பது, மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை அழிக்க, மாநில அரசுகளும் - ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NAGAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NAGAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 mins

January 06, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

Listen

Translate

Share

-
+

Change font size