Versuchen GOLD - Frei
பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு
DINACHEITHI - KOVAI
|May 24, 2025
போக்குவரத்து - மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார்
-
பெங்களூருவில் நேற்று (23.05.2025) ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார்.
அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
மின்சாரத்துறை, தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் மிக முக்கியமானது என்பதால், தமிழ்நாடு அரசின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு (TNPDCL) மானியமாக சுமார் ரூ. 53,000 கோடியும், இழப்பீட்டு நிதியாக ரூ. 52,000 கோடியும் ஒதுக்கி ஆதரவளித்துள்ளது. இது, தமிழ்நாடு அரசு, தனது மக்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சார விநியோகத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணுடன் (CPI) இணைக்கப்பட்டு, ஐந்தாண்டுகளுக்குத் தானியங்கி வருடாந்திரக் கட்டண உயர்வினைக் கொண்ட பல ஆண்டு கட்டண (Multi-Year Tariff) முறையை அமல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய சீர்திருத்தமாக, சிறந்த செயல்பாட்டு மற்றும் நிதித் திறன்களை அடையும் நோக்கில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (TANGEDCO) மறுசீரமைத்து, உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கென தனித்தனி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்பைக் குறைப்பதில் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் 19.47 சதவீதமாகயிருந்த இந்த இழப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 11.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த AT&C இழப்புக் குறைப்பானது, பெரிய அளவிலான நிதி சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது.
Diese Geschichte stammt aus der May 24, 2025-Ausgabe von DINACHEITHI - KOVAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 mins
February 28, 2026
DINACHEITHI - KOVAI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
DINACHEITHI - KOVAI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
DINACHEITHI - KOVAI
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை
1 mins
February 26, 2026
DINACHEITHI - KOVAI
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.
1 min
February 25, 2026
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
DINACHEITHI - KOVAI
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
February 25, 2026
DINACHEITHI - KOVAI
தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
1 min
February 25, 2026
DINACHEITHI - KOVAI
நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
1 min
February 25, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
2 mins
February 24, 2026
Translate
Change font size

