Facebook Pixel தமிழ்நாட்டின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் கட்டப்படவுள்ள சிறு விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | DINACHEITHI - DHARMAPURI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

தமிழ்நாட்டின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் கட்டப்படவுள்ள சிறு விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

DINACHEITHI - DHARMAPURI

|

December 09, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 23 முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையிலும், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அவரது வழிகாட்டுதல்களின்படி இத்துறை மேற்கொண்டு வருகிறது.

20212022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டரங்கங்கள் நிறுவப்படும் எனவும், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ஒரு பகுதியை இந்நோக்கத்திற்காக பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் ஒரு சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2022-2023 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் பத்து இடங்களில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

தேர்தல் அறிக்கையை அ. தி. மு. க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் வெளியிட்டார்.

time to read

1 mins

March 25, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சாத்தான்குளம் வழக்கு - 9 காவலர்களும் குற்றவாளிகள் - மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

time to read

1 min

March 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

சட்டசபைத் தேர்தல்: புதுச்சேரி, கேரளம், அசாமில் வேட்பு மனுதாக்கல் முடிந்தது

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

time to read

1 min

March 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது “விடியல் பயணம்”

மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

time to read

1 min

March 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 16-ந் தேதியுடன் முடிகிறது

ஜூன் 4-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு

time to read

1 min

March 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரி தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி

முதலமைச்சரை சந்தித்தார் ப.சிதம்பரம்

time to read

1 min

March 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க. கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறினார்

தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு

time to read

1 min

March 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் வந்து சேர்ந்தது

நாளை மேலும் ஒரு கப்பல் வருகிறது

time to read

1 min

March 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஈரான் - அமெரிக்கா போர் நீடிக்கிறது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு

time to read

1 min

March 21, 2026

DINACHEITHI - DHARMAPURI

இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழப்பு

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்து படுகாயமுற்ற மே-17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

time to read

1 min

March 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size