يحاول ذهب - حر
ஜூலை 9 பொது வேலைநிறுத்தம் இந்திய வரலாற்றின் மிகப்பெரிய போராட்டம்!
06 June 2025
|Theekkathir Daily
மாபெரும் வெற்றிபெறச் செய்ய சிஐடியு பொதுக்குழு அழைப்பு
-
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே 24-26, 2025 தேதிகளில் ஹரியானாவின் ஃபரீதாபாத்தில் உள்ள சூரஜ்குந்த்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் வரலாற்று முடிவுகளை எடுத்துள்ளது. 363 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், ஜூலை 9, 2025 அன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை இந்திய தொழிலாளர் வர்க்க இயக்க வரலாற்றின் மிகப்பெரிய வேலைநிறுத்தமாக மாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏன் வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டது?
சிஐடியு தலைவர் டாக்டர் கே. ஹேமலதா தனது தலைமை உரையில், முக்கியமான விளக்கம் அளித்தார். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள், பாகிஸ்தானில் இந்திய வான்தாக்குதல்கள், மற்றும் அதிகரித்த பதற்றங்கள் காரணமாக முதலில் திட்டமிட்ட பொது வேலைநிறுத்தம் ஜூலை 9, 2025-க்கு தள்ளிவைக்கப்பட்டது. எல்லைப்புற மாநிலங்களில் உள்ள கொந்தளிப்பான சூழ்நிலை, பிரச்சார நடவடிக்கைகளை பாதித்தது. ஆனால் பாஜக அரசு இந்த அமைதியின்மையை சாதகமாக பயன்படுத்தி தொழிலாளர் விரோதச் சட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தவும் முயன்று வருகிறது.
இதை விவரித்த அவர், ஜம்மு - காஷ்மீர் மக்கள் உட்பட நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்ததாகக் குறிப்பிட்டார். காஷ்மீர் மக்கள் துன்பத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தன்னார்வமாக உதவி செய்த அதே நேரத்தில், இந்துத்வா சக்திகள் இந்த சம்பவத்தைத் தவறாகப் பயன்படுத்தி வகுப்புவாத பிளவுகளை ஆழப்படுத்தவும் முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளைக் குறிவைக்கவும் முயன்றன என அவர் விளக்கினார்.
உலக அரசியல் நிலவரம்
டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் நடவடிக்கைகளை சிலர் விநோதமானது என்று கூறினாலும், உண்மையில் அவை உலகளாவிய தனது ஆதிக்கத்தை மீட்டெடுக்கும் அமெரிக்க சூழ்ச்சித்திட்டங்களின் ஒரு பகுதி என்று ஹேமலதா விளக்கினார். பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக உலகின் மிகச் சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், அமெரிக்கா தனது புவிசார் அரசியல் செல்வாக்கு குறைவதை காண்கிறது; குறிப்பாக சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டிரம்ப்பின் "அமெரிக்காவை மீண்டும் முதன்மை ஆக்குவோம்” என்ற கோஷம் இந்த நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது.
هذه القصة من طبعة 06 June 2025 من Theekkathir Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Theekkathir Daily
Theekkathir Daily
மது போதையில் இளைஞர்கள் ரகளை டாஸ்மாக் கடையை மாற்றக் கோரிக்கை
சேலத்தில் மதுபோதையில் இளைஞர்கள் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
06 June 2025
Theekkathir Daily
ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடிக்கு ஒப்பந்தம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
1 min
06 June 2025
Theekkathir Daily
கொடிக்கம்பம் அகற்றத்திற்கு எதிரான சிபிஎம் வழக்கு தலைமைச் செயலாளரை இணைத்து நீதிமன்றம் உத்தரவு
கொடிக்கம்பங்களை அகற்று வதற்கு, இடைக்காலத் தடை கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வெள்ளியன்று விசாரணை நடைபெறுகிறது.
1 min
06 June 2025
Theekkathir Daily
சென்னை ஐஐடியில் இடம் பிடித்த சேலம் பழங்குடியின மாணவி
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி.
1 mins
06 June 2025
Theekkathir Daily
960 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
1 min
06 June 2025
Theekkathir Daily
அசாமில் வெள்ள நிலைமை மோசமடைகிறது: 7 லட்சம் பேர் பாதிப்பு ; 19 பேர் பலி
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக கன மழை புரட்டியெடுத்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலம் கன மழையால் மிக மோசமான அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் ஆரஞ்சு எச்சரிக்கையுடன் கனமழை பெய்து வருவதால் அசாம் மாநிலத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள் ளத்தில் தத்தளித்து வருகின்றன.
1 min
06 June 2025
Theekkathir Daily
பசுமைப் பொருளாதாரமே இலக்கு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
1 min
06 June 2025
Theekkathir Daily
‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்படாது!’
கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ரயில்வே
1 mins
06 June 2025
Theekkathir Daily
விமானப்படையில் குரூப் 'சி' 153 பணியிடங்கள்
இந்திய விமான படையில் பணிபுரிந்து அனுபவம் பெற 153 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நிரப்பப்பட உள்ளனர்.
1 min
06 June 2025
Theekkathir Daily
இந்தியாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் உதவினார்!
பாக். பிரதமர் ஷெபாஸ் பகிரங்க பாராட்டு
1 min
06 June 2025
Translate
Change font size
