يحاول ذهب - حر
பின்லாந்து நாட்டின் கல்விமுறைமையும் இலங்கை பெற்றுக்கொள்ள கூடிய முன்மாதிரிகள்
August 26, 2025
|Tamil Mirror
பிள்ளைகள் பாடசாலையிலும் வீடுகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் ஓய்வு ஒழிச்சலின்றி கல்விச் செயன்முறைகளிலே ஈடுபடுகின்றனர்.
போட்டித்தன்மையின் காரணமாக சுயநலப் போக்கும் ஏனையோருக்கு உதவுகின்ற மனப்பான்மை இன்மையும் மேலோங்கியுள்ளன. எனவே, பின்லாந்து கல்வி முறையிலே காணப்படுகின்ற சுதந்திரமான மற்றும் சுயாதீனமான நிலைமைகளையும் சுயவேகக் கற்றல் சந்தர்ப்பங்களையும் முன்மாதிரிகளாகக் கொண்டு கற்றல் கற்பித்தல் செயன்முறைகளை மாற்றியமைப்பதன் ஊடாக கல்விமுறைமையிலே விருத்திகளை எதிர்பார்க்கலாம்.
பின்லாந்தின் பாடசாலை முறைமையின் முக்கிய அம்சங்களை நோக்குவோமானால் இங்கு அனைத்து பாடசாலைகளும் 100% அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்றன் எந்தவொரு தனியார் பாடசாலைகளும் அங்கு இல்லை. கல்வி முற்றுமுழுதாக இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. பின்லாந்து பாடசாலைகளில் பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை. மாணவர்களை தரவரிசை அடிப்படையில் வேறுபடுத்துவது இல்லை. மாணவர்களது 13 வயது வரை எந்தப் பொதுப் பரீட்சைகளும் நடத்தப்படுவதில்லை. உயர்தரப் பரீட்சையின் இறுதியில் மட்டுமே விரும்பியோர் இறுதிப்பரீட்சை எழுதலாம். பிள்ளைகள் 7 வயதிலேயே பாடசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் பின் முதல் மூன்று ஆண்டுகளில் கற்றலுக்கு அப்பால் விளையாட்டு, உளவியல் மற்றும் உடல் வளர்ச்சிக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு பாடசாலையில் அதிக பட்சமாக 600 மாணவர்களே அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு வகுப்பறையில் 20-26 வரையான மாணவர்களே இருக்கின்றனர். வீட்டுப் பாடம் எதுவும் வழங்கப்படுவதில்லை. மாணவர்கள் தத்தமது விருப்பத்துக்கு ஏற்ப பாடங்களைக் கற்றுக் கொண்டால் போதுமானதாகக் கருதப்படுகிறது. 7 வயது தொடக்கம் 16 வயது வரை ஆரம்பக் கல்வி மற்றும் கனிஷ்ட இடைநிலைக் கல்வி கட்டாயமானதாக்கப்பட்டுள்ளது. இது முற்றுமுழுதாக இலவசமாக வழங்கப்படுகிறது. 10 வருட கட்டாயக் கல்வியின் பின்னர் மாணவர்கள் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு தொழில் மற்றும் மேலதிக கல்வித் துறைகளைத் தெரிவு செய்து கொள்கின்றனர்.
هذه القصة من طبعة August 26, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
