يحاول ذهب - حر
பணம் இல்லாதது வறுமையா?
July 23, 2025
|Tamil Mirror
உலக வங்கியின் வகைப்படுத்தலின்படி, இலங்கை வறிய நாடுகளில் இருந்து நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும், இன்றும் 25% - 30% சதவீதமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
இலங்கையில் வறுமை குறைவான மாவட்டமாக கொழும்பும் அதிக வறுமையான மாவட்டமாக மன்னாரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் வறுமை கூடிய நாடாக புருண்டி (Burundi) (74.6%- 75.8%). வறுமை குறைந்த நாடாக லக்ஸம்பேர்க் (Luxembourg) (0.5%-01%) அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், ஆசியாவின் ஏழ்மையான நாடாக ஆப்கானிஸ்தான் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு நாடு அல்லது தனி ஒருவர் உண்மையில் வறுமையில் தான் இருக்கின்றாரா? என்பதை நாம் எதை வைத்துத் தீர்மானிக்கின்றோம் பணத்தைக் கொண்டா? அல்லது காணப்படும் வளங்களைப் பொறுத்ததா? வளங்கள் அதிகம் காணப்பட்டாலும் அங்குள்ள மக்கள் வறுமையில் வாடும் தேசங்களும் உண்டு. சொத்துக்கள் இருந்தும் வறுமையில் வாடும் மனிதர்களும் இருக்கின்றார்கள். உண்மையில் எமது தேசம் வளங்களினை சரியாகப் பயன்படுத்துகின்றதா? ஆப்பிரிக்காவினை போல அல்லது இந்தியாவினை போல நம் நாட்டில் நீர் பற்றாக்குறை உண்டா என்று கேட்டால் நிச்சயம் அதற்கு பதில் இல்லை என்பதுதான் நீர் வளம், வளமான நிலம் என்பவற்றினை கொண்ட அழகான தேசம் இவற்றினை சிறந்த வகையில் கையாண்டால் நாட்டின் வறுமை நீங்காமல் விட்டு விடுமா?
காலம் காலமாக மேலைத்தேய நாடுகளுக்குத் தெங்கு, இறப்பர், தேயிலை; என்பவற்றை ஏற்றுமதியும் செய்கின்றோம். என்றாலும், இன்றும் வறுமையில் வாடி பட்டினியை போக்க பிச்சை எடுப்பவர்களை நமது தேசத்தின் முக்கிய மாவட்டத்தில் காணலாம். புகையிரத நிலையங்களில் பேருந்து நிலையங்களில் ஆலயங்களில். ஆதிகாலம் தொட்டு முன்னோர்கள் முதன்முதலில் கண்டறிந்த ஜீவனோபாயங்களுள் முதன்மையானது விவசாயம். இன்றைக்கு மேல் மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாணங்களின் மக்களின் பிரதான ஜீவனோபாயமாக காணப்படுவதும் விவசாயம் தான். மிக மோசமான தொழிலாக இன்று விவசாயத்தினை கருத வைத்துவிட்டது இன்றைய நவீன உலகம். தலைமுறைகள் கடந்து நம் எதிர்கால சந்ததியையும் நம் தாய் தேசம் வளர்க்க வேண்டும். தொழில்நுட்பத்தின் உச்சம் இன்று facebook, what's up, Instagram என்று மூழ்கியும் உண்மையான வயல் தரிசாக தொலைபேசி Online விளையாட்டுக்களில் பயிர் செய்து விளையாடும் நிலையையும் நாம் கண்டுவிட்டோம். இப்படியே போனால் எதிர்கால பிள்ளைகள் உணவினையும் தொலைபேசியில் பார்த்து விட்டு வயிற்றினை பட்டினியில் கழிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
هذه القصة من طبعة July 23, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size

