يحاول ذهب - حر
அறுகம்பையில் என்ன நடக்கின்றது?
July 08, 2025
|Tamil Mirror
இந்த உலகத்தின் அடிநாதமே நிலம் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலத்திற்காகப் போர்கள், போராட்டங்கள், படையெடுப்புக்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடக்கின்றன. காலனித்துவ காலம் முடிவடைந்த பின்னரும் கூட, நில ஆக்கிரமிப்பு என்பது ஏதோ ஒருவகையில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் நிலங்களைப் பல்வேறு வழிகளிலும் சூறையாடுவதற்கான திட்டங்கள் காலகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தும் நோக்கில் அதன் உரிமைத்துவத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி இப்போது மீளப் பெறப்பட்டுள்ளமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
உள்நாட்டுச் சக்திகளால் அதாவது, அரச இயந்திரத்தினால், பிற சமூகங்களால், கம்பனிகளால், பண முதலைகளினால் காணிகள் கபளீகரம் செய்யப்படுவதற்குப் புறம்பாக வெளிநாட்டுச் சக்திகளும் வெவ்வேறு மறைமுகத் திட்டங்களின் ஊடாக இலங்கையில் காலூன்ற முனைகின்றன.
இவற்றுள் மூன்று வகையான முயற்சிகள் உள்ளன எனலாம். ஒன்று, இலங்கையில் வளங்களைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்வது. இரண்டாவது, பாதுகாப்பு மற்றும் அரசியல் நலன்களுக்காகக் காலூன்றுவது. மூன்றாவது, நில ஆக்கிரமிப்பு நோக்கில் வசிப்பது என்பவையாகும்.
இந்த மூன்றாவது வரிசையில்தான் இலங்கையில் இஸ்ரேல் அல்லது சினோனிஸ்டுகளின் ஆதிக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகக் கருதப்படுகின்றது. கொழும்பு, புறநகர்ப் பகுதிகள் மற்றும் பொத்துவில் அறுகம்பேயிலும் இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகின்றது.
தென்னிலங்கையில் பல யூதக் கட்டிடங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்திலேயே பல தடவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. 'தேடிப் பார்க்கின்றோம்', 'பின்னர் சபைக்கு அறிவிப்போம்' என்றுதான் கூறினார்கள்.
இலங்கை தற்போது சுற்றுலாத் துறையில் பெரிதும் தங்கியுள்ளது. இஸ்ரேலியர்கள் அதிகளவு வருகின்றனர். அவர்கள் அதிகம் விரும்பும் இடமாக அறுகம் குடாவும் உள்ளது.
இங்கு பல உணவகங்களை இஸ்ரேலியர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. அதுமட்டுமன்றி, 'சபாட் இல்லம்' என்ற பெயரில் யூத மத்திய நிலையம் ஒன்று உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது.
எனவே, இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பு வரும் என்ற தோரணையில்தான் அரசாங்கம் கருத்து வெளியிடுகின்றது. ஆனால், இதனால் நீண்டகாலத்தில் ஏற்படப் போகும் பாதிப்பு பற்றி முன்னுணர்ந்ததாகத் தெரியவில்லை.
هذه القصة من طبعة July 08, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
