يحاول ذهب - حر
சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்க திமுக ஏன் நீண்ட காலமாக தயங்கியது?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
May 31, 2025
|Now Indiar Times
"திமுக திடீரென சாதி ரீதியான கணக்கெடுப்பை ஆதரிப்பது அதன் கொள்கை சார்ந்த முடிவாகத் தோன்றவில்லை. அரசியல் நெருக்கடி காரணமாக சாதி ரீதியான கணக்கெடுப்பை திமுக ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் இந்த விஷயத்தில் தாமதமாகவும், திசை மாறிய நிலையிலும் உள்ளனர். அதிமுகவோ இதற்கு முரண்பாடாக நேர் எதிராக, தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அண்மையில், விரிவான விதத்தில் சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் போன்ற தருணம். இந்தியாவின் சமூகநீதிக் கொள்கையின் வரையறைகளை சீரமைத்து இடஒதுக்கீடுகளுக்கு மாற்றியமைப்பதற்கான வாக்குறுதி இது தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் இதை நம்பிக்கையுடனும், பெருமையுடனும் நான் வரவேற்கிறேன்.
சாதி ரீதியான கணக்கெடுப்பு என்பது அதிமுக ஏற்கெனவே தெளிவுடனும், முன்னோக்கிய பார்வையுடனும் முன்வைத்த ஒரு வேண்டுகோள். இந்த தருணம், ஒரே இரவில் உருவான தருணமல்ல. சாதி ரீதியான கணக்கெடுப்புக்கான இந்த அழைப்பு இப்போது தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் இதன் வேர்கள், தமிழகத்தின் சமூகநீதி இயக்கத்தில் இருந்து, அதன் கொள்கை நிலத்தில் இருந்து வந்தது.
இந்த சமூகநீதி பயணம் என்பது எங்களது முன்னோக்கிய தொலைநோக்குப் பார்வை கொண்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்ட அஸ்திவாரம். நேர்மையான, சமமான நிதித்துவத்துக்கு அடிக்கல் நாட்டியவர் அவர்தான். 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் முதல்வராக இருந்த நேரத்தில், சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்த சொன்ன முதல் அரசுகளில் எங்களது அரசும் ஒன்று. 1931ம் ஆண்டு காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் காலாவதியான பழைய தரவுகள், தகவல்களை வைத்துக்கொண்டு நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியாது என்று ஆரம்ப முதலே நாங்கள் வாதாடி வருகிறோம்.
முன்னேற்றம் என்பது அனுதாபம் மூலம் வர முடியாது. ஆதாரங்கள் மூலம் மட்டுமே முன்னேற்றம் வரும். 69 சதவிகித இடஒதுக்கீடு கொள்கை மூலம் நீண்டகாலமாக கலங்கரை விளக்கம் போல உறுதியான செயல்பாட்டுடன் விளங்கிய கட்சி அதிமுக. அதிமுகவின் சாதனைகள் ஒரு விபத்து போல திடீரென ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் அல்ல. கட்சியின் அரசியல் உறுதிப்பாடு காரணமாகவும், சட்டரீதியான நிபுணத்துவத்தின் மூலமாகவும் அதிமுகவின் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
هذه القصة من طبعة May 31, 2025 من Now Indiar Times.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Now Indiar Times
Now Indiar Times
செம்மறி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மூலம் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க நிகழ்ச்சி பல்வேறு கிராமங்களில் காரிப் பருவத்திற்கான வேளாண் தொழில்நுட்பங்கள், கால்நடை சார்ந்த தொழில்நுட்பங்கள் வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து விஞ்ஞானிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, அதனை முன்னிட்டு அடைக்கம்பட்டி, தேக்கம்பட்டி மற்றும் எம்.சுப்பலாபுரம் கிராமத்தில் செம்மறி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
1 min
June 06, 2025
Now Indiar Times
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் எம்.எல். ஏ.வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி புனித தோமையார் மலை தெற்கு ஒன்றியம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
June 06, 2025
Now Indiar Times
அண்ணாமலையார் கோவிலில் ரூ.500 கட்டணத்தில் தரிசனம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் சமீப காலமாக தரிசனம் செய்யவும் கிரிவலம் வரவும் பக்தர்களின் வருகை அதிரித்துள்ளது. வார நாட்களில் 2 மணிநேரமும் வார இறுதி நாட்களில் 4 மணிநேரம் முதல் 5 மணிநேரமும் பவுர்ணமி நாட்களில் சுமார் 6 மணிநேரத்திற்கு மேலாகவும் வரிசையில்காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசிக்கின்றனர்.
1 min
June 06, 2025
Now Indiar Times
ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் தொடங்கி வைத்து பார்வையிட்டார்
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் (4.6.2025) திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். சுதர்சனம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்கள்.
1 min
June 06, 2025
Now Indiar Times
அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.9.4 லட்சம் மோசடி செய்த நபர் கைது. 1 செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள் பறிமுதல்
சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 22.08.2024 தேதி ரப்பானிகான், ஆ/வ26, த/பெ.சபீர்கான் என்பவர் அளித்த புகாரில், புகார்தாரர் Binance: BTC, Crypto and NFTS App ல் USDT சம்மந்தமாக டெலிகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த ஒரு கைப்பேசி எண்ணில் பேசியதாகவும், அதில் பேசிய ஒரு நபர் அமெரிக்க டாலரை நேரடியாக Exchange ல் வாங்குவதை விட குறைவான விலைக்கு தருவதாக கூறியதை நம்பி புகார்தாரர் மேற்படி நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அமெரிக்கா டாலர் வாங்குவதற்காக RTGS மூலம் மொத்தம் ரூ.9,40,000/ அனுப்பியதாகவும், பின்னர் மேற்படி நபர் மனுதாரருக்கு அமெரிக்கா டாலரை கொடுக்காமல் ஏமாற்றியதால் புகார்தாரர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மேற்படி மோசடி நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத்
1 min
June 06, 2025
Now Indiar Times
கிரைம் செய்திகள்
அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.9.4 லட்சம் மோசடி செய்த நபர் கைது. 1 செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள் பறிமுதல்
1 min
June 06, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பு
மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் பந்தல் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
1 min
June 06, 2025
Now Indiar Times
ஆர்.கே. நகர் பகுதியில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி பண மோசடி செய்த நபர் கைது
சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பப்பி, பெ/வ.35 என்பவர் தனது கணவர் மூலம் அறிமுகமான ஈஸ்வரன் மற்றும் கந்தகுமார் ஆகியோர் 2023ம் ஆண்டு தீபாவளி பண்டு சீட்டு நடத்துவதாகவும், தாங்கள் இத்திட்டத்தில் சேர்ந்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் கூறியதன்பேரில், தானும் தனக்கு தெரிந்த நபர்களும் இவர்களது தீபாவளி பண்டு சீட்டில் சேர்ந்து 2023ம் ஆண்டு நவம்பர் முதல் 2024ம் ஆண்டு ஜூன் வரை பணம் செலுத்தியதாகவும், தான் செலுத்திய பணம் ரூ.82,500/ உட்பட தனக்கு தெரிந்தவர்கள் சேர்ந்து மொத்தம் ரூ.1,62,000/ பணம் செலுத்தியும், சீட்டு முதிர்வடைந்த பின்னர் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டபோது, தராமல் ஏமாற்றி வந்ததாகவும், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு தங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படியும் பப்பி என்பவர் பி6 ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
1 min
June 06, 2025
Now Indiar Times
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு
கோவை சாய்பாபா காலனி என்.எஸ். ஆர். சாலையில் புதுப்பிக்கப்பட்ட ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதனை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின் தலைவர் ஈ.சந்தானம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
1 min
June 06, 2025
Now Indiar Times
பெங்களூரு காவல் துறை மீது மக்கள் அதிருப்தி
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குக் கூட கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என காவல்துறை மீது பாதிக்கப்பட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
1 mins
June 06, 2025
Translate
Change font size
