يحاول ذهب - حر
கூட்டணி ஆட்சியா? கூட்டணி அரசா?
July 09, 2025
|Dinamani Vellore
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
பி.ஜெபலின் ஜான் சென்னை, ஜூலை 8: அதிமுகவின் மௌனமும் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடும் இந்த விவாதத்தைத் தொடர்ந்து பேசுபொருளாக்கி இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் முறிந்த அதிமுக-பாஜக கூட்டணி, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அமித் ஷா தனது 'எக்ஸ்' பக்கத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனப் பதிவிட்டார். ஆட்சி அமையும் என்று சொன்னாரே தவிர, அரசு அமையும் என்று சொல்லவில்லை. அதற்குள், அமித் ஷா 'கூட்டணி ஆட்சி' என்று அறிவித்துவிட்டார் என்று ஊடகங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு வந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய பிறகு அவருடன் சேர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
அடுத்த நாளே, அமித் ஷா கூறியது 'கூட்டணி ஆட்சிதான்', 'கூட்டணி அரசு அல்ல' என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். 2021-வரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அதிமுக அரசும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருந்தது என்பதையும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில்தான் அமித் ஷா சில நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனத் தெரிவித்து, ஓயாத கூட்டணி ஆட்சி சர்ச்சைக்கு உயிர் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் இப்போதும் எடப்பாடி பழனிசாமியோ அவரது தரப்போ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாஜகவிலும் அதே நிலைதான்.
هذه القصة من طبعة July 09, 2025 من Dinamani Vellore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Vellore
Dinamani Vellore
அரசின் கடனும் மக்களின் கடனே!
ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.
2 mins
January 05, 2026
Dinamani Vellore
வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Vellore
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
Dinamani Vellore
பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
January 05, 2026
Dinamani Vellore
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Vellore
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Dinamani Vellore
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Vellore
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Vellore
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Vellore
வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
January 05, 2026
Translate
Change font size
