يحاول ذهب - حر
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
December 24, 2025
|Dinamani Tiruvarur
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்தனர்.
-
அவர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜோதிபாசுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 ரோந்துப் படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அந்தப் படகை சிறைபிடித்தனர்.
படகிலிருந்த பிரதாப் (28), சந்தியா நிவாஸ்தான் (33), ஜேம்ஸ்ஹெய்டன் (23), காயல்ராஜ் (23), டோஜா (21), ஆண்டனிடெல்மேன் (32), ஆக்போ நிஜோ (17), மரியா ஆட்டோ (19), கோர்ப்பசேவ் (35), மாதன்சன் (28), நிமல் (31), ஆண்டனி தில்மென்(32) ஆகிய 12 மீனவர்களைக் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் அழைத்துச் சென்றனர். மேலும், இந்த மீனவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் 12 பேர் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவர்களை வரும் ஜன.5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 12 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
هذه القصة من طبعة December 24, 2025 من Dinamani Tiruvarur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்
134 ரன்கள் முன்னிலை
1 mins
January 07, 2026
Dinamani Tiruvarur
2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.
1 min
January 07, 2026
Dinamani Tiruvarur
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Tiruvarur
அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு
முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Tiruvarur
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Tiruvarur
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Tiruvarur
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Tiruvarur
பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்
கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.
1 min
January 07, 2026
Dinamani Tiruvarur
சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Tiruvarur
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Listen
Translate
Change font size
