Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

முறைகேடுகளுக்கு வேண்டும் முடிவு!

May 27, 2025

|

Dinamani Tiruvarur

போட்டித் தேர்வுகள் என்பது மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிகளில் பயின்று மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளாமல், சில மணிநேர தேர்வை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது நியாயமா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.

- உதயகுமார் மு.வீரையன்

இந்திய அளவில் உயர்நிலைக் கல்வியில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழகக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை கல்வியை முன்னேற்றப் பயன்படும் என்றாலும், மாணவர்களின் நோக்கம் மருத்துவப் படிப்பிலேயே இருக்கிறது.

வெற்றிபெற வேண்டுமென்ற இலக்கு இருக்குமானால் எந்தத் துறையிலும் சிகரத்தைத் தொடமுடியும். ஆனால், மருத்துவம் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று எண்ணி தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்றுதான் கூறவேண்டும். கல்வியாளர்களின் அறிவுரை மாணவர்களிடம் சென்று சேர்ந்ததாகத் தெரியவில்லை.

மருத்துவக் கனவுக்கு ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு விடாப்பிடியான கொள்கையாகக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இதற்கு ‘விலக்கு’ அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. என்றாலும், இதுவரை இதற்கு முடிவும், விடிவும் ஏற்படவில்லை.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கடந்த மே 4 அன்று நடைபெற்றது. தேர்வு மைய நுழைவாயிலில் காவல் துறையினரும், தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை சார்பில் நியமிக்கப்பட்ட பணியாளர்களும் தீவிர சோதனைகள் நடத்தினர்.

கடந்த ஆண்டு (2024) வினாத்தாள் கசிவு விவகாரம் இன்னும் முடியவில்லை. வழக்குகள் தொடர்கின்றன. முறைகேடுகளும் குறைபாடுகளும் தொடர்கின்றன.

இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வில் (நீட்) முறைகேட்டில் ஈடுபட்டதாக 2024-25 கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேர்ந்த 14 மாணவர்களின் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்துசெய்து ஆணையிட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேலும் 26 எம்.பி.பி.எஸ். மாணவர்களை உடனடி இடைநீக்கம் செய்யவும் என்எம்சி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

المزيد من القصص من Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஒரே நாளில் 10ஆயிரம் பேர் வருகை: கன்னியாகுமரியில் இரவு 7 மணி வரை நீடித்த படகு சேவை

கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை பூம்புகார் படகு சேவை நீடித்தது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Tiruvarur

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு

5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு

time to read

1 min

May 02, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்

மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

time to read

1 mins

May 02, 2026

Dinamani Tiruvarur

இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்

களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Tiruvarur

நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!

பகவத் கீதையின் 13-ஆவது அத்தியாயத்தில், ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அதற்காக அவன் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகளில் ஒன்று தூய்மை.

time to read

2 mins

May 02, 2026

Dinamani Tiruvarur

தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு

ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கி ழமை காலை, மாலை என இரு முறை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 02, 2026

Dinamani Tiruvarur

13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Tiruvarur

அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 02, 2026

Translate

Share

-
+

Change font size