يحاول ذهب - حر

மதிப்புக்கு உரிய மதிப்பு!

October 13, 2025

|

Dinamani Tiruchy

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

- கிருங்கை சேதுபதி

விலை மதிப்பற்றது, விலை மதிக்க முடியாதது என்றெல்லாம் சொல்லுகிறோமே? அப்படியானால் என்ற பதில் கேள்வி கேட்டதும், பயன்படுத்துவதைப் பொருத்தது என்று ஒரு மாணவி கூறினார்.

அது எப்படி? தங்கத்தின் விலை மதிப்பு அதிகம். அதனோடு ஒப்பிட, தக்காளியின் விலை குறைவு. தக்காளி சாப்பாட்டுக்கு உதவும். தங்கத்தைச் சாப்பிட முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார் மாணவர்.

தங்கத்தை விற்றால், தக்காளிக் கடையையே வைக்கலாம் என்று பதிலளித்தார் மற்றொருவர். சின்னத் தக்காளியின் மிகச் சிறிய விதைகூட மண்ணில் விழுந்தால் மறுபடி பல நூறு தக்காளிகளைத் தரும்; முளைக்கும். அதுபோல், தங்கம் முளைக்குமா? இத்தனைக்கும் அதுவும் மண்ணில் இருந்துதான் கிடைக்கிறது என்று மறுத்தார் மாணவி.

தலைப்பு திசைமாறுகிறது, பட்டிமன்றத்தைப்போல். தங்கமா?, தக்காளியா என்று பட்டிமன்றமா இங்கே நடத்துகிறோம்? கேள்வி என்ன? எது விலை உயர்ந்தது என்பது இல்லை. ஒரு பொருளின் முழுமதிப்பு வெளிப்படுத்துவது எப்போது என்று மற்றொருவர் தெளிவுபடுத்தினார்.

'அது பயன்படுத்துபவரின் தகுதியை, தேவையைப் பொருத்தது' என்ற பதிலும் வந்தது. பயன்படுத்தவே இல்லை என்றால், ஒரு பொருள் தன் தகுதியில் மதிப்பில் குறைந்துவிடுமா என்ன என்ற வினாவும் எழுந்தது. பயிற்சி பெறுபவர்களைக் குழுக்களாகப் பிரித்து நடத்திய வகுப்பு என்பதால், பதில் தருபவர் எவரோ, அவர் தம் குழுவில் இருந்து பலத்த கரவொலி எழும்பிவிடும். சுவையான செய்தியாக அமைந்துவிட்டால், அது குழு எல்லை கடந்து பலரது கரவொலிகளையும் பெற்றுவிடும்.

இந்தப் பதிலுக்கு அப்படி ஒரு பொதுக் கரவொலி எழுந்தது. இது பொது நிகழ்வு இல்லை; குழு உரையாடல். பொதுநிகழ்வில்போல், இதுபோன்ற குழு உரையாடலிலும் கரவொலி எழுப்பி அங்கீகரிப்பதும், பாராட்டுவதும்கூட மதிப்பைத் தருவதுதான். எவ்வளவு பேர் எவ்வளவு சப்தமாகக் கரவொலி எழுப்பினார்கள் என்பதைப் பொருத்து ஒரு கருத்தின் மதிப்பை அளவிட்டுவிட முடியாது. பலத்த கரவொலி பெறுகிற உரையைவிட, கைதட்ட மறந்து சிந்திக்க வைக்கிற உரைதான் உயர்ந்தது; பயனுள்ளது.

المزيد من القصص من Dinamani Tiruchy

Dinamani Tiruchy

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Tiruchy

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா

பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruchy

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Translate

Share

-
+

Change font size