يحاول ذهب - حر
கூட்டுறவும் நாட்டுயர்வும்!
August 04, 2025
|Dinamani Salem
இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு கணிசமானது மட்டுமல்ல, தவிர்க்க முடியாததும்கூட.
-
2002-இல் அறிவிக்கப்பட்ட கூட்டுறவுக் கொள்கைக்குப் பிறகு, அந்தத் துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மாறிவிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான், 20 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து தேசிய கூட்டுறவுக் கொள்கை 2025-ஐ மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருக்கிறது.
1904-இல் அன்றைய காலனிய ஆட்சியில் முதல்முறையாக கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று குடியரசானதைத் தொடர்ந்து, தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும் என்று அப்போதைய ஜவாஹர்லால் நேரு அரசு அறிவித்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க முற்பட்டது.
சர்தார் வல்லபபாய் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரின் நண்பரும், காந்தியவாதியுமான திரிபுவன்தாஸ் படேல் என்பவர் தான், இந்தியாவின் கூட்டுறவுச் சங்க முயற்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். 1946-இல் அன்றைய பம்பாய் மாகாணத்தின் குஜராத்தி பேசும் பகுதிகளில், கிராமம் கிராமமாக நடந்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுச் சங்கங்களை ஒவ்வொரு பகுதியிலும் அமைக்க முற்பட்டார் திரிபுவன்தாஸ் படேல். அதன் விளைவாக உருவானதுதான் 'கேரா' பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம். 1950 வரை நமது தேவைக்குப் பால் பவுடரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த இந்தியாவின் 'அமுல்' நிறுவனம், இன்று சர்வதேசச் சந்தையில் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்ததற்கு, கூட்டுறவுச் சங்க வழிமுறைதான் காரணம்.
هذه القصة من طبعة August 04, 2025 من Dinamani Salem.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Salem
Dinamani Salem
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சங்ககிரி நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
சங்ககிரி நகராட்சி சார்பில், நகர்ப்புற காடுகள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் கொங்குநகர் பகுதியில் உள்ள நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் குடமுழுக்கு விழா
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Salem
மேட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
மேட்டூரில் சந்து கடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளைச் சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Salem
கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size