يحاول ذهب - حر
திராவிட மொழிகளின் தாய் தமிழ்!
June 07, 2025
|Dinamani Pudukkottai
தமிழ் அல்லாத ஒரு மொழி திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த 73 மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும் பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும்; மற்றவையாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள்தான்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது எனப் பாவாணர் தமிழ் வரலாறு குறித்து எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என தமிழறிஞர்கள் முதலில் கருதினர். ஆனால், கீழடி ஆய்வுக்குப் பிறகு சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பு என்பது உறுதியாகியுள்ளது. அப்படியானால், தொல்காப்பியத்தின் காலம் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலால் தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழில் பல இலக்கியங்கள் தோன்றியிருக்கவேண்டும்.
அதைப்போல பல சூத்திரங்களில் என்ப, என்பனார் எனத் தொல்காப்பியர் சுட்டிச் செல்கிறார். அதாவது, அவர் காலத்திற்கு முன்பே தமிழில் பல இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன என்பது இவற்றின் மூலம் பெறப்படுகிறது. எனவே, தமிழின் தொன்மை இன்னும் பழைமையானது என்பது உறுதியாகிறது.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே குமரிலபட்டர் என்னும் தெலுங்கு அறிஞர், தெலுங்கைத் தமிழ்மொழியிலிருந்து பிரித்துக் காட்டுவதற்காக ‘ஆந்திர திராவிட பாஷா’ என்று கூறினார். அதற்குப் பின்னரே கன்னடமும் மலையாளமும் தமிழிலிருந்து பிரிந்தன.
கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்று பேரா. சுந்தரம் பிள்ளை கூறியது பழந்தமிழைப் பொருத்தவரை உயர்வு நவிற்சி அல்ல, உண்மை.
பழந்தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் உள்ள வேறுபாடு மிகச் சிறிய அளவினதே ஆகும். இலத்தீன் மொழிக்கும், இத்தாலியம், பிரெஞ்சியம், ஸ்பானியம், போர்த்துகீசியம் முதலிய மொழிகட்கும் இடைப்பட்ட உறவே தமிழுக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகட்கும் இடைப்பட்ட உறவாகும்.
هذه القصة من طبعة June 07, 2025 من Dinamani Pudukkottai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025

Dinamani Pudukkottai
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025

Dinamani Pudukkottai
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size