يحاول ذهب - حر

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

May 09, 2025

|

Dinamani Pudukkottai

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.

- பழ. கருப்பையா

அண்மைக் காலமாக நாடு இதுவரை சந்தித்திராத சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. நம்முடைய அரசியல் சாசனம் மிகவும் விரிவானது. ஆட்சியினர், அதிகார வர்க்கம், நீதித்துறை எனத் தனித்தனி அதிகாரங்களோடு மூன்று பிரிவுகளாக வரையறுக்கப்பட்டு, நாடு இயங்குகிறது. ஒன்றோடு ஒன்று உராய்வதும் உண்டு. எழுதி வைக்கப்பட்டுள்ள சாசனத்தின்படி அந்த உராய்வுகளுக்குத் தீர்வு காணப்படுவதுமுண்டு. உச்சநீதிமன்றத்தைக் 'குடியாட்சியின் காவல் நாய்' என்று கூறுவர். அரசியல் சாசனமே உயர்ந்தது என்று அதற்குத் தனிப்பு கழ் பாடுவோரும் உண்டு. எந்த அரசியல் சாசனமும் மனிதர்களால் ஆக்கப்படுவதுதான். அதை ஆக்கும் மனிதர்களின் அறிவுத் திறம், நேர்மைத் தரத்தை ஒட்டி அந்தச் சாசனம் சிறப்புறுகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட காலம் அறம் பிறழாச் சான்றோர்கள் நாட்டின் தலைமைகளில் இருந்த காலம். நேரு, வல்லபபாய் படேல், அம்பேத் கர், கிருபளானி, செயப்பிரகாசு நாராயணன், இராசாசி என நிகரற்ற அறிஞர்களும் மழை பெய்யென்று இவர்கள் கட்டளையிட்டால் பெய்யும் என்று சொல்லத்தக்க அளவு நேரியர்களும் சேர்ந்து விவாதித்து விவாதித்து உருவாக்கிய அரசியல் சாசனம் நம்முடையது. இந்தியத் தலைமையமைச்சராய் இருந்த மொராச்சி தேசாய் ஒருமுறை சொன்னார்: குற்றவியல் சட்டத்தைக் கிழித்தெறிந்து விட்டாலும், என்னால் எந்தத் தப்பும் செய்ய முடியாது. இப்படி அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது. பேரரசன் அசோகனுக்குப் பிறகு அறம் கோலோச்சிய காலம் அது தான். நியாயமே எல்லாவற்றிலும் பெரியது. தனிமனித வாழ்வாயினும், ஆட்சி அதிகாரமாயினும் நியாயத்தை மையமாகக் கொண்டே சிந்தித்தும் வாழ்ந்தும் பழக்கப்பட்ட தலைமுறையினர் வடித்த அரசியல் சாசனம் என்பதால் அவர்கள் இன்னொரு பக்கத்தைப் பார்க்கத் தவறிவிட்டனர். அந்த இன்னொரு பக்கம்தான் இன்றைய குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். ஒரு மந்திரி போக்குவரத்துத் துறையில் இருந்தார். ஓட்டுநர், நடத்துநர் வேலைகளுக்கு ஆளெடுத்தபோது, அவர்களுக்கு அந்த வேலைகளைத் தருவதற்காக இலஞ்சம் வாங்கினார் என்பது குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கு கொஞ்ச

المزيد من القصص من Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

நாளைமுதல் சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

முதல்முறையாக வாசகர்களுக்கு இலவச அனுமதி

time to read

2 mins

January 07, 2026

Dinamani Pudukkottai

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Pudukkottai

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size