استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة
The Perfect Holiday Gift Gift Now

மாணவ மாணிக்கங்கள்!

July 04, 2025

|

Dinamani Puducherry

நாம் யாருக்கும் பாரமாக வாழாமல் உயர்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்பட வேண்டும். இன்று நம் நாட்டில் அனைத்தும் இருந்தும் சுயநல சிந்தனைதான் நம்மை சிதிலமடைய வைக்கிறது. அதை மாற்ற நம் சிந்தனையை உயர்வாக்கிச் செயல்படுவதன் மூலம்தான் எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க முடியும்.

- க.பழனித்துரை

பள்ளி மாணவர்களுக்கான ஒரு பயிற்சி முகாம். நடைபெற்ற இடம் மாற்றுத் திறனாளிகளை தன்மானமிக்க திறனாளிகளாக உருவாக்கும் திருக்கோயிலாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம். தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்துக்கு அருகே அமைந்துள்ள ஒரு தவச்சாலை.

மாற்றுத் திறனாளிகளுக்கு புதுவாழ்வளிக்கும் இரண்டு மாமனிதர்களால் நடத்தப்படும் வேள்வி. அதைச் சென்று பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த இரண்டு மாமனிதர்களும் வாழும் தெய்வங்கள் என்று வணங்க வைக்கும் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள். மற்றவர் துணையின்றி எந்தச் செயலையும் செய்ய இயலாத இரண்டு மனிதர்களும் கர்மயோகிகளாகச் செயல்பட்டு நம்பிக்கை ஒளியை அனைவருக்கும் தருகின்றார்கள்.

அந்த இடத்தில்தான் இந்த மாணவர்களுக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமில் பள்ளி மாணவர்கள் 85 பேர் தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். அவர்களுடன் நானும் உரையாட வருகிறேன் என்று மத்திய, மாநில அரசுகளில் அரசுச் செயலராக பணிபுரிந்த ஓர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்த அதிகாரியும் வந்திருந்தார்.

இந்த முகாமில் அனைத்து வசதிகளுக்கான செயல்களையும் மாணவர்களே பொறுப்பேற்று நடத்தினர். அடுத்து, கருத்துரைஅனைத்தையும்உரையாடல்களாகவே வடிவமைத்து அந்த மாணவர்களின் உள் திறனை அவர்களுக்குக் காண்பித்தது முகாமின் மற்றொரு சிறப்பு.

இந்த மாணவர்களின் செயல்களைப் பார்த்த அந்த ஓய்வுபெற்ற அரசுச் செயலர், இவர்கள் என்னுடன் கேள்வி கேட்டு உரையாடட்டும் என்று கூறி, ஒட்டுமொத்தவகுப்பையும் கேள்வி-பதிலாக மாற்றிவிட்டார். முதல் அமர்வில் அவர்களிடம் உரையாடலைத் தொடங்கியவர் பல கேள்விகளை முன்வைத்தார். அதில் முதல் கேள்வி, நாம் வாழும் உலகம் இன்று மிகவும் சிறப்பாக, அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறதா?

சற்றும் தாமதிக்காமல் இல்லை என்று பதில் தந்தனர். அதற்கு என்ன செய்வது? மறு கேள்வி. அடுத்த பதில், அதை மாற்ற வேண்டும். யார் மாற்றுவது? அதற்கும் உடனே, நாம்தான் என்ற பதில். எப்படி? உடனே தலைமை ஏற்க வேண்டும்.

المزيد من القصص من Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

January 01, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.

time to read

1 min

January 01, 2026

Dinamani Puducherry

வெற்றியின் தொடக்கம் கனவு!

வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.

time to read

2 mins

January 01, 2026

Dinamani Puducherry

அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை

அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 01, 2026

Dinamani Puducherry

காங்கிரஸ் விருப்ப மனு: கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் ஜன.

time to read

1 min

January 01, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!

நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.

time to read

3 mins

January 01, 2026

Dinamani Puducherry

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ரஷீத் கான் தலைமையில் ஆப்கன்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி, ரஷீத் கான் தலைமையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

January 01, 2026

Dinamani Puducherry

எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் தகராறு: அதிமுகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கொளத்தூரில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறில் அக்கட்சியினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

time to read

1 min

January 01, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

புதிய வெற்றிகள் நிறைந்த ஆண்டாகட்டும்

முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

time to read

1 mins

January 01, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

பொங்கல் தொகுப்புக்கு ரூ.248 கோடி

தமிழக அரசு ஒதுக்கீடு; 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்

time to read

1 min

January 01, 2026

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back