يحاول ذهب - حر

நீட் தேர்வுக்குத் தடை தேவையா?

May 31, 2025

|

Dinamani Puducherry

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, பட்டியலின-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் பொது ஒதுக்கீட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. அப்படியிருக்க நீட் தேர்வை எதிர்ப்பதற்கு போதுமான காரணம் இல்லை.

- டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா

நுழைவுத்தேர்வு என்பது ஏதோ நேற்றோ, வந்தது அல்ல; அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் வரலாறு இருக்கிறது. இது அரசால் காலங்காலமாக நடத்தப்படும் ஒன்றுதான்.

சரியாக 54 ஆண்டுகளுக்கு முன் சென்னை சட்டக் கல்லூரியின் வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவர் சேர்க்கைக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. 1961-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அகமதாபாத் இந்திய நிர்வாக மேலாண்மை நிறுவனம், நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் கெட்டிக்கார மாணவர்களின் கனவாகவும், அமெரிக்காவுக்கு செல்லும் கடவுச் சீட்டாகவும் இருக்கிறது.

இதற்கு முன் 1858-ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐ.சி.எஸ். என்ற கடுமையான போட்டித் தேர்வும், சுதந்திர இந்தியாவில் ஆட்சித் துறை, காவல் துறை, வெளியுறவுத் துறை என பல வகை வேலைக்கான நுழைவுத் தேர்வுகளும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) 75 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. அதுபோல், மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வுப் பணி ஆணையம் ஆண்டாண்டு காலமாக தேர்வுகளை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு மூலம் பல மாநிலங்களில், பல பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேர்வு பெற்ற மாணவர்களை, ஒரே நேர்கோட்டில் பரிசோதித்து திறமையானவர்களை மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்புதான். இதில் 15% வெளிமாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு உள்ளது.

ஏதோ நுழைவுத் தேர்வை இந்த ஆட்சி கொண்டு வந்தது; அந்த ஆட்சி தடுக்கவில்லை; ஒரே நாளில் அதை நீக்கி விடுவோம்; ஒரு கோடி கையொப்பம் வாங்கினால் நீட் மறைந்துவிடும் என்று பேசுவதெல்லாம் அற்பமான அரசியல். உண்மையில், நுழைவுத் தேர்வுகள் வெளிப்படையாக அரசியலாக்கப்படுகின்றன.

கல்வி, வெகுஜனமயம் ஆக்கப்பட்ட பிறகு, வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்துள்ள ஒரு நாட்டில் தகுதி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக நடத்தப்படுவதல்ல; அவை வேண்டாதவர்களை அல்லது தகுதி இல்லாதவர்களை வெளியேற்றுவதற்கு நடத்தப்படுபவை.

المزيد من القصص من Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Puducherry

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size