يحاول ذهب - حر
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
June 27, 2026
|Dinamani Nagapattinam
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
சில பெற்றோர் தம் பிள்ளைகள் யாரையாவது விரும்பிவரும் நிகழ்வுகள் அவர்களின் கவனத்துக்கு வரும்போது, உடனே அத்தை, மாமா பிள்ளைகளுக்குதிருமணம் செய்து வைத்துவிடும் வழக்கமும் உண்டு.
நெருங்கிய ரத்த உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களை ஸ்வீடன் நாடு முற்றிலும் தடை செய்துள்ளது. இந்தச் சட்ட முன்மொழிவுக்கு ஸ்வீடன் நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டம் 1.07.26 முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருகிறது. ஜூலை 1, 2026-க்குப் பிறகு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இத்தகைய உறவுமுறைத் திருமணம் செய்துகொண்டு, அதன் அடிப்படையில் ஸ்வீடன் விசா அல்லது குடியுரிமை பெற முயன்றால், அந்தத் திருமணத்தை ஸ்வீடன் அரசு அங்கீகரிக்காது. இந்தத் தடைச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஸ்வீடனுக்கு வரும் அனைத்து நாட்டு பார்வையாளர்களின் திருமணங்களுக்கும் இது பொருந்தும். அதற்கு முன்னர் ஸ்வீடனில் சட்டபூர்வமாகச் செய்யப்பட்ட திருமணங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும்.
பிரிட்டனின் பிரபல மருத்துவ ஆய்விதழான லான்செட் இதழில், நெருங்கிய உறவினர் திருமணம் குறித்த ஆய்வில் (2013) ரத்த உறவு திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் இரட்டிப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், பிராட்ஃபோர்டு பகுதியில் 11,300-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு ரத்த உறவு திருமணமே காரணம் என்று நிரூபணம் ஆகியுள்ளது.
هذه القصة من طبعة June 27, 2026 من Dinamani Nagapattinam.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Nagapattinam
அதிமுக மாநில நிர்வாகிகள் 4 பேருக்கு புதிய பொறுப்பு
அதிமுகவில் கொள்கைப் பரப்பு துணைச் செயலர்கள், மகளிரணி இணைச்செயலர் என மொத்தம் 4 பேர் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Nagapattinam
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 27, 2026
Dinamani Nagapattinam
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Dinamani Nagapattinam
சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
1 min
June 27, 2026
Dinamani Nagapattinam
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Nagapattinam
முன்னேறியது மொராக்கோ
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
1 min
June 26, 2026
Dinamani Nagapattinam
தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Nagapattinam
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Dinamani Nagapattinam
ஆழ்கடல் விபத்துகள்!
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2 mins
June 26, 2026
Listen
Translate
Change font size
